“குடிசை மக்கள் பிரச்சினையை தலித் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்” அ

அ.மார்க்ஸ் நேர்காணல்

October 16, 2012 at 1:06pm

{“தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் காலாண்டிதழானஅணையா வெண்மணி” (அக்டோபர், 2012) இதழுக்கென எடுக்கப்பட்ட நேர்காணல். செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் மார்க்சின் வீட்டில் அவரைச் சந்தித்து எடுக்கப்பட்டது. முன்னணியின் மாநிலப் பொருளாளர் ஆர்.ஜெயராமன், மாநிலக் குழு உறுப்பினர்கள் நீதிராஜன் மற்றும் எஸ்.கே.சிவா ஆகியோர்வெண்மணிசார்பாகப் பங்கேற்றனர்.

1960 களின் பிற்பகுதி தொடங்கி சென்னைக் குடிசை வாழ் மக்களின் பிரச்சினைகள், உலக வங்கித் தலையீட்டால் ஏற்பட்ட கொள்கை மாற்றங்கள், பெரும்பான்மைக் குடிசை மக்கள் தலித்களாகவும் டொழிலாளிகளாகவும் இருந்தபோதும் அவர்களின் பிரச்சினைகள் தலித் பிரச்சினையாகவும் தொழிலாளிகளின் பிரச்சினையாகவும் பார்க்கபடாமற் போன வரலாறு, உலக மயம் மற்றும் உலகத் தரமான பெருநகர உருவாக்கங்களினூடாக  சென்னைகுள்ளேயே இரு சென்னைகள் உருவாகும் அவலம் முதலிய பல பிரச்சினைகள் இந் நேர்காணலில் அலசப்படுகின்றன.} 

 

வெண்மணிசென்னை நகரில் அடிக்கடிக் குடிசைகள் தீப்பற்றி எரிவது குறித்து உண்மை அறியும் குழுக்களை அமைத்து பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளீர்கள். எவ்வளவு காலமாக இப்படிக் குடிசைகள் தீப்பற்றி எரிகின்றன? இதனுடைய பின்புலமென்ன?

 

.மார்க்ஸ்நீண்ட காலமாக இது நடந்து வருகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடனேயே இதுபோல ஒரு மிகப் பெரிய தீ விபத்து நடந்தது. தீப்பிடிக்காத சுமார் 5000 வீடுகளை தி.மு.க அரசு அப்போது எரிந்த இடத்திலேயே கட்டிக் கொடுத்தது. குடிசைப் பகுதிகளில் தீ விபத்துகள் இயற்கையாகக் கூட நடக்கலாம். சமீப காலமாகச் சென்னை நகரில் நடக்கும் தீ விபத்துக்களை அரசு தானாகவே ஏற்பட்டவை எனவும் மின் கசிவு முதலியவைதான் காரணம் எனவும் சொல்லுகிறது. ஆனால் மக்கள் அதை நம்புவதில்லை. அப்படி நம்பாததற்குக் குறிப்பாக இரண்டு காரணங்கள் உள்ளன. முதலில் இந்த விபத்துக்கள் எல்லாம் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சென்னை நகரை அழகுபடுத்தும் திட்டங்கள் அறிவிக்கப் படும் இடங்களிலேயே நடை பெறுகின்றன. திட்டங்களுக்காக அப்பகுதியிலுள்ள குடிசைகளை அகற்ற வேண்டுமென சம்பத்தப்பட்ட அதிகாரிகள் அம் மக்கள் மத்தியில் வந்து பேசியிருப்பார்கள். கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தியிருப்பார்கள். மக்கள் அதற்குச் சம்மதித்திருக்க மாட்டார்கள். திடீரென அப்பகுதிக் குடிசைகள் தீப்பற்றி எரியும். 2009 இறுதியில் வியாசர்பாடி செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலத்திற்கு அருகில்  320 குடிசைகள் தீப்பற்றி எரிந்தன. அதற்குச் சில நாட்களுக்கு முன் சாலை விரிவாக்கத்திற்காக அப் பகுதியினர் வெளியேற வேண்டுமென அதிகாரிகள் கூட்டம் நடத்திப் பேசியிருந்தார்கள். அருகிலுள்ள பி.கே.புரம் மற்றும் புது நகரிலும் அதே காலகட்டத்தில் சுமார் 130 வீடிகள் தீப்பற்றி எரிந்தன. ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக இங்கும் மக்கள் வெளியேற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்ததோடு, அவர்களது வீடுகளெல்லாம் அளந்து குறியிடப்பட்டிருந்ததையும் நாங்கள் பார்த்தோம். 2009 ஜூனில்  அடையாறு ஆற்றை ஒட்டி உள்ள நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் விரிவு ஆகிய இடங்களில் நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் அடுத்தடுத்து எரிந்தன. அடையாறு-போரூர் எக்ஸ்பிரஸ் ஹைவேக்காக நிலம் அளந்து கல் பதிக்கப்பட்ட இடம் இது. தீ விபத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் அடையாறு பூங்கா ட்ரஸ்ட் சார்பில் நடத்தப்பட்ட ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்கு இம்மக்கள் அழைத்துச் செல்லப்பட்டு அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் பற்றி இவர்களிடம் “கருத்துக் கேட்கப்பட்டு” இருந்தது. இப்படி நிறையச் சொல்லலாம். சென்ற மாதத்தில் அசோக் பில்லர் அருகே அம்பேத்கர் காலனி எரிந்து 500 குடிசைகள் சாம்பலாகியதல்லவா? அருகில் தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்திற்கு,  இப்பகுதி மக்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள  ஒரு கிரவுண்ட் தேவை எனச் சொல்லிப் பிரச்சினை இருந்தது. ஆக இந்த ‘விபத்துக்களெல்லாம்’ திட்டமிட்டுச் செய்யப்பட்டவை என்கிற ஐயம் மக்களுக்கு உள்ளது.

 

இரண்டாவதாக, தற்போது குடிசைகள் எரியும்போதெல்லாம், முன்னைப்போல அதே இடங்களில் தீப்பிடிக்காத குடியிருப்புகளை அரசு கட்டித் தருவதில்லை. உடனடியாக அவர்கள் அப்புறப் படுத்தப்பட்டு, நகருக்கு வெளியே துரைப்பாக்கம், ஓக்கியம், பெரும்பாக்கம் முதலான இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர், நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் விரிவிலிருந்த 106 வீடுகளும் எரிந்த ஒரு வாரத்தில் அப்பகுதி மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதோடு, அப்பகுதி முள்வேலியிட்டு அடைக்கப்பட்டு உள்ளே யாரும் நுழையக் கூடாது எனப் பலகைகளும் நடப்பட்டன. பெருங்களத்தூர் கன்னடபாளையம் அருகில் ஆள் நடமாட்டமும் எந்த வசதியும் இல்லாத பகுதி ஒன்றில் ஆளுக்கு ஒரு சென்ட் நிலத்தைக் கொடுத்துக் கட்டாயமாக அவர்கள் கொண்டு விடப் பட்டனர். தற்போது எரிந்துள்ள அசோக்நகர் மற்றும் மக்கீஸ் கார்டன் பகுதிகளிலும்கூட உடனடியாக வந்து பார்வையிட்ட அமைச்சர்களும் மேயரும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சொன்னது, இங்கிருந்து நீங்கள் போய்விடுங்கள் என்பதுதான். எரியும் பகுதிகளில் இருந்தவர்களுக்குச் சில ஆயிரம் நிவாரணப் பணம் வழங்குவதோடு முடித்துக் கொள்ளுகிறார்கள். முன்னைப்போல அந்தந்த இடங்களிலேயே தீப்பிடிக்காத வீடுகள் கட்டிக் கொடுப்பதில்லை. இதையெல்லாம் பார்க்கும்போதுதான் இந்த விபத்துக்கள் எல்லாம் திட்டமிட்டுச் செய்யப்பட்டவையோ என்கிற எண்ணம் மக்களுக்கு ஏற்படுகிறது.

 

வெண்மணிமக்களுக்கு இத்தகைய சந்தேகம் ஏற்படுகிறது என்று சொல்கிறீர்கள். நீங்கள் பலமுறை இந்தப் பகுதிகளுக்குச் சென்று அறிக்கை அளித்துள்ளீர்கள். உங்கள் கருத்து என்ன? இந்தத் தீவிபத்துகளுக்குப் பின் ஏதாவது சதி உள்ளதா?

 

.மாஎங்களின் உண்மை அறியும் குழு அறிக்கைகளில் நாங்கள் நூறு சதம் சந்தேகத்திற்கிடமில்லாமல் உள்ளவற்றைத்தான் இறுதி முடிவாகச் சொல்வது வழக்கம். அப்படிச் சாத்தியமில்லாத நிலையில் அரசும் ஊடகங்களும் முன்வைக்கும் கதைகளில் உள்ள முரண்களை அம்பலப்படுத்துவோம். அதன் மூலம் அவர்கள் மறைக்க முயல்கிற அம்சங்களின்பால் மக்களின் கவனத்தை ஈர்ப்போம். முழுமையாக நடந்ததை வெளிக் கொணர வேறு சாத்தியமான விசாரணை முறைகளைக் கோருவோம். இந்த விஷயத்திலும் நாங்கள் அப்படித்தான் சொல்கிறோம். மக்களின் அய்யங்களில் முழுக்க முழுக்க நியாயம் இருக்கிறது. அரசுத் தரப்பில் சொல்லும் காரணங்கள் பலவும் நம்பும்படியாக இல்லை. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலிருந்த புகழ் பெற்ற மூர் மார்க்கெட்டைக் கொளுத்தித்தானே அங்கு கடை வைத்திருந்தோரை  வெளியேற்றினார்கள். இந்தத் தீவிபத்துக்கள் எல்லாவற்றையும் மின் கசிவு என்பதுபோலக் காரணம் சொல்லி, “விசாரணையில் உள்ளது” எனப் பதிவு செய்து கொஞ்ச காலத்தில் கதையை முடித்து விடுகிறார்கள். தீயணைப்புத் துறையைக் கேட்டால், “நாங்கள் சேவை செய்யும் அமைப்பு மட்டுந்தான். விசாரிப்பது எங்கள் பொறுப்பு அல்ல. நீங்கள் சொல்வது போல இது திட்டமிட்ட சதி வேலையாகவும் இருக்கலாம். எந்தெந்தப் பகுதியில் தீ விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து எங்களுக்குத் தெளிவாகத் தெரியும். குடிசைப் பகுதிகளுக்கு மிக அருகாக தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு செல்ல முடியாது, குழாய்களைக் கொண்டு சென்று தீயை அணைக்க முயலும் முன் காரியம் முடிந்து விடுகிறது. இந்தப் பகுதிகளில் நிரந்தரமாகத் தண்ணீரை அதற்கான தொட்டிகளில் வைத்திருப்பதையும் ‘சாலிட் ஹைட்ரன்ட்’ முதலான தொழில் நுட்ப வசதிகளையும் செய்ய வேண்டும். ஆனால் அரசு இதற்கு முன்னுரிமை அளிப்பதில்லை” என்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் மக்கீஸ் கார்டனில் சுமார் 200 குடிசைகள் மூன்று வாரங்களில் தவணை முறையில் எரிந்து சாம்பலாயின. எல்லாவற்றையும் மின்கசிவு எனச் சொல்லி மேல் விசாரணை இல்லாமல் வைத்திருந்தார்கள், இது குறித்து ஆயிரம் விளக்குக் காவல் நிலையத் துணை ஆய்வாளரிடம் கேட்டோம். மக்களின் ஐயங்களைச் சொல்லி, இப்படித் தவணை முறையில் எரிவதெல்லாம் நம்பும்படியாக இல்லையே, அவர்களை வெளியேற்றுவதற்கான சதி முயற்சி என்கிற கோணத்தில் இதை விசாரிக்க முடியாதா எனக் கேட்டோம். அவர் சிரித்தார். “அப்படீன்னா, அரசாங்கமே இப்படிச் செய்யுது என்று விசாரிக்கணும் என்கிறீங்களா? அது எப்படி சார் முடியும்?  அரசாங்கம் மக்களுக்கு நல்லதுதானே செய்யும்?” என்றார். ஆக, போலீஸ் விசாரணை மூலம் இந்தத் தீவிபத்துக்கள் குறித்த   உண்மைகள் வெளிவராது.

 

இன்று சென்னையில் நான்கைந்து முக்கிய வளர்ச்சித் திட்டங்கள்  செயலில் உள்ளன. துறைமுகம் அருகிலுள்ள போர் நினைவுச் சின்னத்திலிருந்து மதுர வாயில் வரை கூவம் ஆற்றின் ஓரமாகவும், அடையாறு மலர் மருத்துவ மனையிலிருந்து போரூர் நந்தம்பாக்கம் வரையில் அடையாற்றங்கரை ஓரமாகவும், எண்ணூர்- பேசின் பிரிட்ஜ்- வால்டாக்ஸ் சலை வழியாக பக்கிங்ஹாம் கால்வாய் ஓரமாகவும் கட்டப்படும் அதி வேக உயர் நெடுஞ்சாலைகள் இவற்றில் முக்கியமானவை. இந்த நதிக்கரை ஓரங்களில்தான் பெரும்பாலான குடிசைப் பகுதிகள் உள்ளன. மிகவும் சுகாதாரக் கேடான, எந்த வசதியும் இல்லாத இந்தச் சாக்கடைக் கரையோரங்களில்தான்  புழுக்களைப்போல நம் மக்கள் வசித்து வருகின்றனர், நகர்ப் புறத்தில் அமைந்துள்ள வாழ்வாதாரங்களுக்காகவும், பிள்ளைகளின் படிப்பிற்காகவும் எல்லாக் கொடுமைகளையும் சகித்துக் கொண்டு இவர்கள் காலங் காலமாக இங்கே வசித்து வருகின்றனர். இந்த வளர்ச்சித் திட்டங்களை ஊக்குவித்துக் கடன் தரும் உலக நிதி நிறுவனங்களின் நிபந்தனைகளுக்குத் தக இன்று நமது அரசுகள் நகர்ப்புறக் குடியிருப்பு உருவாக்கம் தொடர்பான தனது கொள்கைகளில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளன. குடிசைகள் இருந்த இடங்களிலேயே உறுதியான வீடுகளைக் கட்டித் தருவது, வசதிகளை மேம்படுத்துவது என்பதற்குப் பதிலாக, குடிசை மக்களை நகர் மையங்களிலிருந்து வெளியேற்றி தூரமாகக் கொண்டு சென்று பிற குடிமக்களிடமிருந்துப் பிரித்துக் குடியேற்றுவது என்பது இன்றைய அணுகல் முறையாக உள்ளது. இந்தப் பின்னணியில் இந்தத் தீவிபத்துக்கள் மிகுந்த சந்தேகத்திற்குரியவைகளாக உள்ளன. இதனை நமது காவல்துறை விசாரித்தால் உண்மைகள் வெளிவராது. எனவே கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள குடிசைப் பகுதி தீ விபத்துக்கள் குறித்து  நீதி விசாரணை ஒன்று வேண்டும் என்கிறோம்.

 

வெண்மணிஉலக நிதி நிறுவனங்களின் தலையீட்டால் மத்திய மாநில அரசுகள் குடிசை மாற்று தொடர்பான தமது அணுகள் முறைகளில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளன என்று சொன்னீர்கள். இதைச் சற்று விளக்க முடியுமா?

 

.மாமிகவும் விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒன்று இது. கூடிய வரை சுருக்கமாகச் சொல்வதானால், சுதந்திரத்திற்குப் பிந்திய ஆண்டுகளில், குறிப்பாக அறுபதுகள் தொடங்கி கிராமப் புறங்களிலிருந்து பெரிய அளவில் அடித்தள மக்கள் நகரங்களுக்கு, அதிலும் குறிப்பாகச் சென்னை நகரத்திற்கு இடம் பெயர்ந்தார்கள். அரசின் தவறான கொள்கைகள், கிராமப்புறம் மற்றும் விவசாய வளர்ச்சியில் போதிய அக்கறை காட்டாமை, நேரு காலத்தியத் தொழில் முயற்சிகள் யாவும் நகரங்களை மையப்படுத்தி இருந்தது முதலியன இப்படியானதற்குக் காரணங்களாக இருந்தன. இவர்கள் ஆக அடித்தள மக்கள் மட்டுமல்ல. ஆக அடித்தளச் சாதிகளையும் சேர்ந்தவர்கள். இன்று சென்னையிலுள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 25 முதல் 30 சதம் வரை குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களாகவும், வீடற்றவர்களாகவும் உள்ளனர். வீடற்றவர்கள் என்பது நடைபாதை ஓரங்கள் முதலானவற்றில் ஒண்டியிருப்பவர்கள். இந்தக் குடிசை வாழ் மக்கள் மற்றும் வீடற்றோர்களில் 90 சதம் பேர் தலித்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

 

வெண்மணிஆகக் குடிசைவாழ் மக்களின் பிரச்சினைகளை ஒரு தலித் பிரச்சினையாகவும் பார்க்க வேண்டும் அல்லவா?

 

.மாநிச்சயமாக. அதைத்தான் சொல்ல வருகிறேன். இங்கிருந்த பாரம்பரியமான தலித்கள், கடலோரங்களில் வசித்த மீனவர்கள், ரிக்‌ஷா இழுப்பவர்கள் முதலான உதிரித் தொழிலாளிகள் போன்றோரில் பெரும்பகுதியும் உறுதியான வீடுகளின்றிக் குடிசைப் பகுதிகளில் வசித்தவர்கள்தான் என்பதையும் நாம் மறந்து விடக் கூடது. எனினும் புதிதாக இடம்பெயர்ந்து வந்த அடித்தளச் சாதியினர் நகரத்தில் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட அசுத்தமானப் பகுதிகளில், குறிப்பாக இன்று சாக்கடைகளாக மாறிப்போன நதிக்கரைகளில் குடிசைகள் அமைத்துக் குடியேறினர். இவர்களில் 90 சதம் பேர் தலித்களாகவே இருந்தபோதும் சென்னை நகரத் தலித்கள் என்றால் பரம்பரியமாக இங்கிருந்த தலித்கள் மட்டுமே மனம் கொள்ளப்பட்டனர். புதிதாகக் குடியேறிய இந்தக் குடிசை மக்களைத் தலித்களாகப் பார்க்கும் வழமை இங்கில்லை. சாதி என்பதை பிறப்புடனும் பிறந்த நிலத்துடனும் (Nativity) தொடர்புபடுத்திப் பார்க்கும் நமது மனநிலையும் இதற்கொரு காரணமாக இருக்கலாம்.

 

இறுக்கமான மார்க்சீய வரையறையின்கீழ் இவர்கள் “தொழிலாளி வர்க்கமாகவும்” கருதப்படவில்லை. வேலை உறுதி,  தொழிற் கள உரிமைகள் எதுவும் இல்லாமல் துண்டு துக்காணி வேலைகள் (piecemeal works) செய்து வாழ்பவர்கள் இவர்கள். வீட்டு வேலைகள் செய்வது, கார்ப்பொரேஷன் பள்ளி வாயில்களில் நாவற் பழம், மலிவான மிட்டாய்கள் முதலியவற்றை விற்பது, பூ விற்பது, வண்ணம் பூசுவது, வண்டி இழுப்பது, மெக்கானிக் ஷாப்களில் இரும்பு அடிப்பது,  சாவு மேளம் அடிப்பது, பாலியல் தொழிலாளியாகச் செயல்படுவது, சிறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது, கட்டிடத் தொழிலாளிகளாக ஒப்பந்தக் காரர்களிடம் பணிபுரிவது, குழந்தைத் தொழிலாளிகளாக ஓட்டல்கள் முதலானவற்றில் வேலை செய்வது, குப்பை பொறுக்குவது, குழி தோண்டுதல், லாரிகளில் சுமை ஏற்றுதல் முதலானக் கடின வேலைகளைச் செய்வது முதலியன இவர்களில் பெரும்பாலானோரது தொழில்கள். இந்தத் தொழில்களில் பல கடினமானவை மட்டுமல்ல,  பாலியல் சுரண்டல் மட்டுமின்றிப் பல்வேறு வகையான  சுரண்டல்களுக்கும் வழி வகுப்பவை. இப்படியான உதிரித் தொழில்களைச் செய்து வந்தவர்கள் என்பதால் இவர்கள் “தொழிலாளி வர்க்கமாகவும்” கருதப்படவில்லை.

 

ஆக வர்க்க அடிப்படையில் அணி திரட்டியவர்கள், ஒடுக்கப்பட்ட சாதிகளைத் திரட்டியவர்கள் எல்லோராலும் புறக்கணிக்கப் பட்டவர்களாகவும் கைவிடப்பட்டவர்களாகவும் இவர்கள் இருந்தனர்; இருக்கின்றனர்.

 

1967ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் அணுகல் முறைகளிலிருந்து அவர்கள் பல அம்சங்களில்

வேறுபட்டனர், தங்களுடைய ஆதரவு சக்திகளாக இருந்த குடிசை வாழ் மக்கள் முதலானோருக்கு உடனடிப் பலன்கள் கிட்டுமாறு சில திட்டங்களை அவர்கள் நடைமுறைப் படுத்தினர். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட குடிசை மாற்று வாரியம் மற்றும் 1971ம் ஆண்டு நகரத் திட்டமிடல் சட்டம் முதலியன இந்த வகையில் குறிப்பிடத்தக்கவை.

“ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்பதைக் குறிக்கோள் வாசகமாகக் கொண்டு 1970 டிசம்பர் 23 அன்று நொச்சிக்குப்பத்தில் உருவாக்கப்பட்ட 1000 குடியிருப்புகளுடன் ‘தமிழ்நாடு குடிசை மற்று வாரியத்தை’த் துவக்கி வைத்த அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, இன்னும் ஏழாண்டுகளில் சென்னை நகரில் உள்ள குடிசைகள் எல்லாவற்றையும் ஒழித்து விடுவதாகச் சூளுரைத்து அதற்கென 40 கோடி ரூபாய்களை ஒதுக்கவும் செய்தார். 1971ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி சென்னையிலுள்ள குடிசை வாழ் மக்களின் என்ணிக்கை 7.37 இலட்சம். 2001ம் ஆண்டுக் கணக்கின்படி இது 10.79 இலட்சம். இது மொத்தச் சென்னை மக்கள்தொகையில் 26 சதம். இன்றைய நிலையில், நடைபாதையில் வசிப்போர்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் இது உயர்ந்த பட்சம் 30 சதமாக இருக்கலாம்.

 

திமு.க அரசு தான் அறிவித்த குறிக்கோளை நிறைவேற்ற இயலாமற் போனதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கலாம். ஆனால்  தொடக்கத்தில் இது தொடர்பாக அது கொண்டிருந்த அணுகல் முறை உண்மையில் வரவேற்கப்படக் கூடிய ஒன்று. குடிசைகளை ஒழித்து அந்த இடங்களிலேயே குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளை உருவாக்குவது என்பதில் குடிசை மக்கள் அதே இடங்களில் குடியமர்த்தப் படுவது என்பது முக்கிய அம்சமாக இருந்தது. நொச்சிக்குப்பம், டூமிங்குப்பம், அயோத்தி குப்பம் முதலான மீனவர் பெரும்பான்மையாக இருந்த பகுதிகளில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் இப்படித்தான் உருவாயின. இராம.அரங்கண்ணல்  போன்ற கட்சித் தலைவர்கள் குடிசை மாற்று வாரியத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். கட்டப்பட்ட குடியிருப்புகளை யாருக்கு அளிப்பது என்கிற அதிகாரம் வாரியத் தலைவருக்கு அளிக்கப்பட்டது. மாநில அரசு நிதி ஒதுக்கீடு, ‘ஹட்கோ’ போன்ற நிறுவனங்களிடமிருந்து பெற்ற நிதி உதவி ஆகியவற்றின் மூலம் இவை நிறைவேற்றப்பட்டன.

ஆனால் அடுத்தடுத்த நிலைகளில் உலக நிதி நிறுவனங்கள் இதில் தலையிட்டு மிகப் பெரிய கொள்கை மாற்றங்களுக்கு வழி வகுத்தன. இதன் முக்கியமான அம்சம் என்னவெனில் குடிசை மக்களை நகர மையத்திலிருந்து வெளியேற்றி  வெகு தொலைவில் கொண்டு சென்று பிற நகர மக்களிலிருந்துப் பிரித்துக் குடியேற்றுவது என்பதே. 1972லிருந்து உலக வங்கியின் தலையீடு தொடங்கியது. இதற்கென அது சில கொள்கை அறிக்கைகளையும் உருவாக்கியது, Urbanisation (1972), Sites and Services Projects (1974), Housing (1975) முதலியன இவற்றில் சில. இது குறித்து நித்யா ராமன் விரிவாக ஆய்வு செய்துள்ளார் (EPW, July 30, 2011). குடிசை மாற்று நடவடிக்கைகளில் அரசியல் தலையீட்டைக் குறைத்து அதிகாரவர்க்க மயப்படுத்துவது (bureucritisation),  மக்கள் நலன் என்பதைக் கட்டிலும் இந்தத் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் நிதியை எவ்வாறு சிக்கனமாகவும் மீட்டெடுக்கும் வகையிலும் பயன்படுத்துவது முதலான அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. முன்னதாக நான்காம் நிலை அரசு ஊழியர்களுக்கு இக்குடியிருப்புகள் வழங்கப்படும்போடு அவர்கள் மாதந்தோறும் வெறும் 10 ரூபய்கள் கொடுத்தால் போதுமானது எனவும், வைப்புத் தொகையான 500 ரூபாயையும் கூட அவர்கள் கட்ட வேண்டியதில்லை எனவும் தி.மு.க அரசு உத்தரவிட்டிரூந்தது குறிப்பிடத்தக்கது.

1977ல் மொத்தத் திட்டத் தொகையான 62 மில்லியன் டாலரில் 24 மி டாலரை உலக வங்கி கடனாக அளித்தது.  சென்னை நகர வளர்ச்சித் திட்டம்1 (MUDP 1) என இதற்குப் பெயர். 1980-88ல் MUDP 2க்கு 42மி டாலரும், 1988-97 காலகட்டத்தில் தமிழ்நாடு நகர வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில் 255 மி டாலரும் கடனளிக்கப்பட்டது. குடிசைப் பகுதி மக்களை அவர்களிடத்திலிருந்து வெளியேற்றாமல் அவரவர் இடங்களிலேயே குடிசை மாற்று வாரியக் கட்டிடங்களை கட்டிக் குடியமர்த்துவது என்கிற தமிழக அரசின் கொள்கையை உலக வங்கி வெறுப்புடன் பார்த்தது. நகருக்கு வெளியே இடங்களைக் கண்டுபிடித்து அங்கே தங்குவதற்கான ‘வசதிகளை  ஏற்படுத்தி’ தகுதியானவர்களுக்கு அளிப்பது, கூடியவரை கட்டிடங்களாகக் கட்டி அளிப்பது என்பதைத் தவிர்ப்பது, அரசு மாநியங்களைப் பெரிய அளவில் குறைப்பது, வாரியத் தலைவர் பதவிகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிப்பது முதலியன உலகி வங்கியின் கொள்கைகளாக அமைந்தன. கட்டப்பட்ட வீடுகளைப் பயனாளிகளுக்கு அளிக்கும்போது, அவர்களிடமிருந்து உடனடியாகக் கட்டுமானச் செலவில் பத்து சதத்தை வசூலிப்பது, மீதத் தொகையை 12சத வட்டியில் 20 ஆண்டுகளில் வசூலிப்பது முதலியன உலக வங்கி ஏற்படுத்திய சில மாற்றங்கள். முன்னதாக 4 சத வட்டியே பயனாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

 

இப்படித் தொடங்கியதுதான் குடிசை மக்களை நகர மையத்திலிருந்து வெளியேற்றி ஓக்கியம், துரைப்பாக்கம், பெரும்பாக்கம் முதலான இடங்களுக்குக் கொண்டு செல்வது என்பது. 1986ல் மெரீனா கடற்கரையை அழகு படுத்துவது என்கிற பெயரில் மீனவர் குடியிருப்புகளக் காலி செய்ய எம்.ஜி.ஆர் அரசு நடவடிக்கை மேற்கொண்டதும், இடம்பெயர மறுத்த மீனவர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 6 பேர்கள் கொல்லப்பட்டதும் இந்தப் பின்னணியில்தான் நடந்தது.

 

வெண்மணிசென்னைக்குள் இனி குடிசை மாற்று வாரியக் கட்டிடங்களே கட்டுவது இல்லை என்பதுதான் அரசு முடிவா?

 

.மா: ஆமாம். அரசு அப்படித்தான் முடிவெடுத்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு மக்கீஸ் கார்டனில் குடிசைகள் எரிந்ததையொட்டி நாங்கள் குடிசை மாற்று வாரியத்தில் விசாரித்தபோது இத்தகைய பதில்தான் வந்தது. பட்டினப்பாக்கம் தவிர இனி சென்னைக்குள் குடிசை மாற்றுக் கட்டிடங்கள் கட்டுவதற்கான திட்டமே இல்லை என உறுதியாகச் சொன்னார்கள். மேயர் சைதை துரைசாமியும் அதைத்தான் சொன்னர். “சென்னைக்குள் எங்கே சார் இடமிருக்கு? இருந்தா காட்டுங்க, அம்மாட்ட சொல்லி உடனே கட்டித் தருகிறேன்” என்றார்.

 

வெண்மணிஅவர்கள் சொல்வது உண்மைதானா? சென்னை நகர மையத்தில் இனிமேல் இடமே கிடையாதா?

 

.மா: இல்லை. அது தவறான கருத்து.  தவறு என்பதைக் காட்டிலும் அது முழுப் பொய். இது குறித்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து வரும்  “Transparent Chennai’ என்கிற அமைப்பு சில முக்கிய தகவல்களை முன்வைத்துள்ளது.

 

அதன்படி. சென்னை நகருக்குள் புதிதாகக் குடிசைக் குடியிருப்புகள் தோன்றிக் கொண்டே இருந்த போதிலும் 1985க்குப் பின் புதிய குடிசைப் பகுதிகள் ஏதும் அராசால் அங்கீகரிக்கப் படவில்லை. ஆனால் புதிய குடிசைப் பகுதிகள் உருவாகும்போது அவற்றைக் கண்டறிந்து அங்கீகரிக்க வேண்டுமென்பது விதி. கடைசியாக இது குறித்த விரிவான ஆய்வு 1971ல் செய்யப் பட்டது. அப்போது 1202 புதிய குடிசைப் பகுதிகள் அடையாளம் கண்டு அறிவிக்கப் பட்டன. அதற்குப் பின் 1985ல் அந்தப் பட்டியலில் மேலும் 17 குடியிருப்புகள் புதிதாகச் சேர்க்கப்பட்டன. அவ்வளவுதான்.அதன்பின் நூற்றுக்கணக்கான புதிய குடிசைப் பகுதிகள் உருவாகியிருந்த போதிலும் அரசு அவற்றைக் கண்டு கொள்ளவில்லை.  சிலவற்றில் வாழ்ந்தவர்கள் உரிய விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் வெளியேற்றப் பட்டுள்ளனர்.

 

ஆனால் இப் புதிய குடிசைப் பகுதிகள் அனைத்தும் சென்னை நகரத்திற்குள் மிகக் குறைந்த சிறு நிலப் பரப்பிலேயே அமைந்துள்ளன. குடிசை மாற்று வாரியம் 2002ல் மேற்கொண்ட ஒரு கணக்கெடுப்பின் படி இந்த அங்கீகரிக்கப் படாத புதிய குடிசைப் பகுதிகள் சென்னை நகரின் மத்தியப் பகுதியில் வெறும் 1.7 சதுர கி.மீ பரப்பிலேயே அமைந்துள்ளன. மொத்தச் சென்னைப் பெரு நகரப் பகுதியிலும் வெறும் 4.8 சதுர கி.மீ பரப்பில்தான் இவை உள்ளன. இது விரிவாக்கப் பட்ட கார்பொரேஷனின் மொத்தப் பரப்பில் வெறும் 1.1 சதம் மட்டுமே.

 

தகவல் அறியும் உரிமைச் சட்டதைப் பயன்படுத்தி பாடம் நாராயணன்  அறிந்துள்ள ஒரு தகவலின்பட்டி நகர்ப்புற நில உச்ச வரம்புச் சட்டத்தைப் பயன்படுத்தி சென்னை முழுவதிலும் அரசு கையகப் படுத்தியுள்ள மொத்த நிலத்தில் பயன்படுத்தப் படாது கைவசமுள்ள நிலம் 10.42 சதுர கி.மீ. ஆக அரசு நினைத்தால் இந்தக் குடிசைப் பகுதிகளில் வாழும் அனைத்து மக்களையும் அவர்களின் வாழ்வை அழிக்காமல் சென்னை நகருக்குள்ளேயே குடியமர்த்த இயலும். வெறும் 4.8 சதுர கி.மீயில் சுகாதாரமற்ற குடிசைகளில் வாழும் இவர்களை உபரியாக உள்ள 10.42 சதுர கி.மீ பரப்பில் குடியேற்ற முடியாதா என்ன?

 

ஆனால் சிங்காரச் சென்னைக்குப் பொருத்தமற்ற அழுக்குகளாகக் கருதி இம்மக்களை செம்மஞ்சேரி முதலான பகுதிகளுக்கு வெளியேற்றுவதிலேயே குறியாய் இருக்கும் அரசுகள் நகருக்குள் இடமே இல்லை எனச் சாதிக்கின்றன. குடிசைப் பகுதிகள் எரியும்போது அந்த இடத்திலேயோ, இல்லை 5கி.மீ சுற்றளவுக்குள் இடம் ஒன்றை அரசு கைப்பற்றியோ அதில் அவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு  கட்டித் தரவேண்டும். இத்தகைய பரிந்துரைகளையும் கோரிக்கைகளையும் வைக்கும்போது அப்படி ஒரு இடம் இருந்தால் சொல்லுங்கள் எனக் கோரிக்கை வைப்பவர்களிடமே அரசு தரப்பில் பதிலுரைப்பது மிகவும் பொறுப்பற்ற ஒரு செயல். அரசிடமே இது குறித்துப் போதுமான தகவல்கள், ஆவணங்கள் முதலியன இருக்கும். நிறைய அரசு நிலங்கள் முதலியவற்றைத் தனியார்கள் ஆக்ரமித்துள்ளனர். பஞ்சமி நிலங்கள், வக்ஃப் நிலங்கள் ஆகியவையும் இவ்வாறு ஆக்ரமிக்கப் பட்டுள்ளன.  சென்னை நகருக்குள் இது போன்ற சாத்தியமுள்ள இடங்களைச் சம்பந்தப் பட்ட அரசுத் துறைகளின் மூலம் கண்டுபிடித்து அதன் பட்டியலொன்றை வெளியிட வேண்டும்.  வளர்ச்சி, மற்றும் சென்னையை அழகு படுத்தல் குறித்த  மேட்டிமைப் பார்வையிலேயே நின்று கொண்டு பிரச்சினையை அணுகினால் நகருக்குள் இடமில்லை என்பதுதான் பதிலாக வரும். குடிசை வாழ் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கிலிருந்து பிரச்சினையை அணுகினால் வேறு தீர்வுகள் நமக்குக் கிடைக்கும். ஆனால் அரசுகள் மாறினாலும் அவற்றின் அணுகல் முறைகள் குடிசை மக்களின் வாழ்வுரிமையைக் காக்கும் திசையில் இல்லை.

 

வெண்மணிஏன் இப்படிக் குடிசைப் பகுதிகளை அங்கீகரிக்க மறுக்கிறார்கள்? செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் முதலான இடங்களில் கட்டப்பட்டுள்ள, கட்டப்பட்டு வருகிற அடுக்குமாடிக் கட்டிடங்களைப் பார்த்துள்ளீர்களா? அது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

 

.மாஎந்த வகையிலும் குடிசைப் பகுதி மக்களுக்குச் சட்டபூர்வமான நிலை அளித்துவிடக் கூடாது என்பதுதான்.  இவர்களை எப்போதும் சட்ட விரோத ஆக்ரமிப்பாளர்களாக வைத்துக் கொள்ளவே அரசு விரும்புகிறது. நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும்.  குடிசைப் பகுதிகள் பலவற்றில் மக்கள் தாமாகவே மின் இணைப்புகளைக் கொடுத்துக் கொள்கின்றனர். அசோக் பில்லர் அருகிலுள்ள அம்பேத்கர் காலனிக்கு நாங்கள் சென்றபோது எரிந்து போன இடங்களில் அவர்கள் அமைத்திருந்த தற்காலிகக் குடியிருப்புகளுக்கு அவர்களாகவே இணைப்புக் கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். அரசுக்கும் மின்சார வாரியத்திற்கும் இதெல்லாம் தெரியும். ஆனாலும் இந்த “மின் திருட்டு” அறிந்தே அனுமதிக்கப் படுகிறது. குடிசை வாழ் மக்களை பிற குடிமக்களுக்குச் சமமானவர்களாக நடத்த அரசு விரும்பவில்லை. அவர்களை ஒருவகைச் சட்ட விரோதக் குடிமக்களாகவும், குற்ற நிலையினராகவுமே வைத்துக்கொள்ள அரசு நினைக்கிறது. குடிசைப் பகுதிகளை அங்கீகரித்தால், அவர்களை நினைத்தபடி வெளியேற்ற இயலாது. சில விதி முறைகளைப் பின்பற்றியாக வேண்டும்.

 

செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் முதலான இடங்களுக்குச் சென்றிருக்கிறோம். கண்ணகி நகர் போன்ற இடங்களில் உள்ள இந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளின் நிலை பற்றி எங்கள் அறிக்கையில் விரிவாகப் பேசியுள்ளோம். முன்பிருந்த இடங்களிலிருந்து சுமார் 20,30 கி.மீ தொலைவில் இவர்கள் இடம்பெயர்த்துக் குடியமர்த்தப்படும்போது முதலில் அவர்கள் வாழ்வாதாரம் அழிந்து விடுகிறது. வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்த பெண்கள் அவற்றைத் தொடர இயலுவதில்லை. பிள்ளைகள் படிக்க முடிவதில்லை. குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் கிடையாது. கடன், கந்து வட்டி, கள்ளச் சாராயம், ராவுடியிசம், தற்கொலைகள், இப்படித்தான் அங்கே வாழ்க்கை அமைந்துள்ளது.

 

இப்போது பெரும்பாக்கத்தில் ‘ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்ட்த் திட்ட’த்தின் கீழ்  மிகப் பெரிய மெகா குடியிருப்பு ஒன்றை அரசு கட்டிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் 950 கோடி ரூபாய் நிதியில் இது கட்டப்பட்டு வருகிறது. இது ஒரு எட்டு மாடி வளாகம். 27,158 வீடுகள் இங்கே கட்டபடுகிறதாம். ஒவ்வொரு வீடும் 200 சதுர அடியாம். இப்படியான மெகா குடியிருப்புத் திட்டம் மிக மிக மோசமானது. முதலில் இவ்வாறு அடித்தள மக்களை சமூகத்திலிருந்து பிரித்துக் கொண்டு சென்று ஒதுக்கி வைப்பது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அடுத்து, இந்த ஜவஹர்லால் நேரு திட்டம், ராஜீவ் அவாஸ் யோஜனா (JNNURM / RAY) என்பனவெல்லாம் நகர்ப்புறங்களில் உள்ள குடிசைகளை அந்த்தந்த இடங்களிலேயே (in situ) வைத்து மேம்படுத்துவது என்பதுதான். இவ்வாறு குடியிருப்புப் பகுதிகளிலிருந்து 30 கி.மீ தொலைவில் புதிய குடியிருப்புகளைக் கட்டுவதற்கு இந்த நிதியைப் பயன்படுத்துவது தவறு.

 

பெரும்பாக்கம் குடியிருப்பில் எல்லாவிதமான வசதிகளையும் அரசு செய்து தரும் எனச் சொல்வதையும் நாம் நம்ப இயலாது. பாடம் நாராயணன் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்றுள்ள தகவலின்படி அங்கே 20 அங்கன்வாடிகள் 3 நர்சரிப் பள்ளி, 5 தொடக்கப் பள்ளிகள், 2 உயர்நிலப் பள்ளிகள், 2 மேல் நிலைப் பள்ளிகள், 1 கல்லூரி, 1 விடுதி, 50 படுக்கைகள் உள்ள ஒரு மருத்துவமனை எல்லாம் கட்டித்தரப்படுமாம்.  ஒவ்வொரு வீட்டிலும் 5 பேர்கள் இருப்பதாகக் கொண்டால் பெரும்பாக்கம் குடியிருப்பில் உள்ள  27,158 வீடுகளிலும் 1,35,790 பேர் இருப்பார்கள். இவர்களுக்கு எப்படி 50 படுக்கை கொண்ட மருத்துவமனை போதும்? குறைந்த பட்சம் 100 அங்கன்வாடிகள் 20 பள்ளிகள் தேவைப்படாதா? அடுக்கு மாடிக் குடியிருப்பில் 20 க்கும் மேற்பட்ட லிஃப்ட்கள் பொருத்தப்படுமாம். எவ்வளவு காலத்திற்கு இவை ஒழுங்காக வேலை செய்யும்? இப்படி எத்தனையோ கேள்விகள் உள்ளன.

4 அல்லது 5 ஆயிரங்களுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இப்படி ஒரே இடத்தில் கட்டுவது மிகப் பெரிய அபத்தம். அரசு அதிகாரிகளே இந்த முட்டாள்தனமான திட்டத்தை எதிர்த்துள்ளதாக அறிகிறோம். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

 

வெண்மணிஇன்று நிறைய செய்திகளைப் பகிர்ந்து கொண்டோம். சென்னை நகரக் குடிசை வாழ் மக்கள் சந்திக்கும் இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக முன்னுரிமை அளித்துச் செயல்படுத்த வேண்டிய திட்டங்களாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

 

.மாநிறைய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்ததற்கு மிக்க நன்றி. உலகமயம் பல்வேறு தளங்களில் அடித்தள மக்களின் வாழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. “தேச அரசுகள் தனியார் மயப் படுத்தப்படல்” (privatization of nation states)

Top of Form

 

குடிசை வாழ் மக்களின் பிரச்சினையை தலித் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும்

(தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் காலாண்டிதழான “அணையா வெண்மணி” (அக்டோபர், 2012) இதழுக்கென எடுக்கப்பட்ட நேர்காணல்).

1960 களின் பிற்பகுதி தொடங்கி சென்னைக் குடிசை வாழ் மக்களின் பிரச்சினைகள், உலக வங்கித் தலையீட்டால் ஏற்பட்ட கொள்கை மாற்றங்கள், பெரும்பான்மைக் குடிசை மக்கள் தலித்களாகவும் தொழிலாளிகளாகவும் இருந்தபோதும் அவர்களின் பிரச்சினைகள் தலித் பிரச்சினையாகவும் தொழிலாளிகளின் பிரச்சினையாகவும் பார்க்கபடாமற் போன வரலாறு, உலக மயம் மற்றும் உலகத் தரமான பெருநகர உருவாக்கங்களினூடாக சென்னையிலேயே இரு சென்னைகள் உருவாகும் அவலம் முதலிய பல பிரச்சினைகள் இந்நேர்காணலில் அலசப்படுகின்றன.

வெண்மணி: சென்னை நகரில் அடிக்கடிக் குடிசைகள் தீப்பற்றி எரிவது குறித்து உண்மை அறியும் குழுக்களை அமைத்து பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளீர்கள். எவ்வளவு காலமாக இப்படிக் குடிசைகள் தீப்பற்றி எரிகின்றன? இதனுடைய பின்புலமென்ன?

அ.மார்க்ஸ்: நீண்ட காலமாக இது நடந்து வருகிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடனேயே இதுபோல ஒரு மிகப் பெரிய தீ விபத்து நடந்தது. தீப்பிடிக்காத சுமார் 5000 வீடுகளை தி.மு.க அரசு அப்போது எரிந்த இடத்திலேயே கட்டிக் கொடுத்தது. குடிசைப் பகுதிகளில் தீ விபத்துகள் இயற்கையாகக் கூட நடக்கலாம். சமீப காலமாகச் சென்னை நகரில் நடக்கும் தீ விபத்துக்களை அரசு தானாகவே ஏற்பட்டவை எனவும் மின் கசிவு முதலியவைதான் காரணம் எனவும் சொல்லுகிறது. ஆனால் மக்கள் அதை நம்புவதில்லை. அப்படி நம்பாததற்குக் குறிப்பாக இரண்டு காரணங்கள் உள்ளன. முதலில் இந்த விபத்துக்கள் எல்லாம் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சென்னை நகரை அழகுபடுத்தும் திட்டங்கள் அறிவிக்கப் படும் இடங்களிலேயே நடை பெறுகின்றன. திட்டங்களுக்காக அப்பகுதியிலுள்ள குடிசைகளை அகற்ற வேண்டுமென சம்பத்தப்பட்ட அதிகாரிகள் அம் மக்கள் மத்தியில் வந்து பேசியிருப்பார்கள். கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தியிருப்பார்கள். மக்கள் அதற்குச் சம்மதித்திருக்க மாட்டார்கள். திடீரென அப்பகுதிக் குடிசைகள் தீப்பற்றி எரியும். 2009 இறுதியில் வியாசர்பாடி செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலத்திற்கு அருகில் 320 குடிசைகள் தீப்பற்றி எரிந்தன. அதற்குச் சில நாட்களுக்கு முன் சாலை விரிவாக்கத்திற்காக அப் பகுதியினர் வெளியேற வேண்டுமென அதிகாரிகள் கூட்டம் நடத்திப் பேசியிருந்தார்கள். அருகிலுள்ள பி.கே.புரம் மற்றும் புது நகரிலும் அதே காலகட்டத்தில் சுமார் 130 வீடிகள் தீப்பற்றி எரிந்தன. ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக இங்கும் மக்கள் வெளியேற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்ததோடு, அவர்களது வீடுகளெல்லாம் அளந்து குறியிடப்பட்டிருந்ததையும் நாங்கள் பார்த்தோம். 2009 ஜூனில் அடையாறு ஆற்றை ஒட்டி உள்ள நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் மற்றும் எம்.ஜி.ஆர் நகர் விரிவு ஆகிய இடங்களில் நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் அடுத்தடுத்து எரிந்தன. அடையாறு-போரூர் எக்ஸ்பிரஸ் ஹைவேக்காக நிலம் அளந்து கல் பதிக்கப்பட்ட இடம் இது. தீ விபத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் அடையாறு பூங்கா ட்ரஸ்ட் சார்பில் நடத்தப்பட்ட ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்கு இம்மக்கள் அழைத்துச் செல்லப்பட்டு அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் பற்றி இவர்களிடம் “கருத்துக் கேட்கப்பட்டு” இருந்தது. இப்படி நிறையச் சொல்லலாம். சென்ற மாதத்தில் அசோக் பில்லர் அருகே அம்பேத்கர் காலனி எரிந்து 500 குடிசைகள் சாம்பலாகியதல்லவா? அருகில் தற்போது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்திற்கு, இப்பகுதி மக்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள ஒரு கிரவுண்ட் தேவை எனச் சொல்லிப் பிரச்சினை இருந்தது. ஆக இந்த ‘விபத்துக்களெல்லாம்’ திட்டமிட்டுச் செய்யப்பட்டவை என்கிற ஐயம் மக்களுக்கு உள்ளது.

இரண்டாவதாக, தற்போது குடிசைகள் எரியும்போதெல்லாம், முன்னைப்போல அதே இடங்களில் தீப்பிடிக்காத குடியிருப்புகளை அரசு கட்டித் தருவதில்லை. உடனடியாக அவர்கள் அப்புறப் படுத்தப்பட்டு, நகருக்கு வெளியே துரைப்பாக்கம், ஓக்கியம், பெரும்பாக்கம் முதலான இடங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர், நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் விரிவிலிருந்த 106 வீடுகளும் எரிந்த ஒரு வாரத்தில் அப்பகுதி மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதோடு, அப்பகுதி முள்வேலியிட்டு அடைக்கப்பட்டு உள்ளே யாரும் நுழையக் கூடாது எனப் பலகைகளும் நடப்பட்டன. பெருங்களத்தூர் கன்னடபாளையம் அருகில் ஆள் நடமாட்டமும் எந்த வசதியும் இல்லாத பகுதி ஒன்றில் ஆளுக்கு ஒரு சென்ட் நிலத்தைக் கொடுத்துக் கட்டாயமாக அவர்கள் கொண்டு விடப் பட்டனர். தற்போது எரிந்துள்ள அசோக்நகர் மற்றும் மக்கீஸ் கார்டன் பகுதிகளிலும்கூட உடனடியாக வந்து பார்வையிட்ட அமைச்சர்களும் மேயரும் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சொன்னது, இங்கிருந்து நீங்கள் போய்விடுங்கள் என்பதுதான். எரியும் பகுதிகளில் இருந்தவர்களுக்குச் சில ஆயிரம் நிவாரணப் பணம் வழங்குவதோடு முடித்துக் கொள்ளுகிறார்கள். முன்னைப்போல அந்தந்த இடங்களிலேயே தீப்பிடிக்காத வீடுகள் கட்டிக் கொடுப்பதில்லை. இதையெல்லாம் பார்க்கும்போதுதான் இந்த விபத்துக்கள் எல்லாம் திட்டமிட்டுச் செய்யப்பட்டவையோ என்கிற எண்ணம் மக்களுக்கு ஏற்படுகிறது.

வெண்மணி: மக்களுக்கு இத்தகைய சந்தேகம் ஏற்படுகிறது என்று சொல்கிறீர்கள். நீங்கள் பலமுறை இந்தப் பகுதிகளுக்குச் சென்று அறிக்கை அளித்துள்ளீர்கள். உங்கள் கருத்து என்ன? இந்தத் தீவிபத்துகளுக்குப் பின் ஏதாவது சதி உள்ளதா?

அ.மா: எங்களின் உண்மை அறியும் குழு அறிக்கைகளில் நாங்கள் நூறு சதம் சந்தேகத்திற்கிடமில்லாமல் உள்ளவற்றைத்தான் இறுதி முடிவாகச் சொல்வது வழக்கம். அப்படிச் சாத்தியமில்லாத நிலையில் அரசும் ஊடகங்களும் முன்வைக்கும் கதைகளில் உள்ள முரண்களை அம்பலப்படுத்துவோம். அதன் மூலம் அவர்கள் மறைக்க முயல்கிற அம்சங்களின்பால் மக்களின் கவனத்தை ஈர்ப்போம். முழுமையாக நடந்ததை வெளிக் கொணர வேறு சாத்தியமான விசாரணை முறைகளைக் கோருவோம். இந்த விஷயத்திலும் நாங்கள் அப்படித்தான் சொல்கிறோம். மக்களின் அய்யங்களில் முழுக்க முழுக்க நியாயம் இருக்கிறது. அரசுத் தரப்பில் சொல்லும் காரணங்கள் பலவும் நம்பும்படியாக இல்லை. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலிருந்த புகழ் பெற்ற மூர் மார்க்கெட்டைக் கொளுத்தித்தானே அங்கு கடை வைத்திருந்தோரை வெளியேற்றினார்கள். இந்தத் தீவிபத்துக்கள் எல்லாவற்றையும் மின் கசிவு என்பதுபோலக் காரணம் சொல்லி, “விசாரணையில் உள்ளது” எனப் பதிவு செய்து கொஞ்ச காலத்தில் கதையை முடித்து விடுகிறார்கள். தீயணைப்புத் துறையைக் கேட்டால், “நாங்கள் சேவை செய்யும் அமைப்பு மட்டுந்தான். விசாரிப்பது எங்கள் பொறுப்பு அல்ல. நீங்கள் சொல்வது போல இது திட்டமிட்ட சதி வேலையாகவும் இருக்கலாம். எந்தெந்தப் பகுதியில் தீ விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து எங்களுக்குத் தெளிவாகத் தெரியும். குடிசைப் பகுதிகளுக்கு மிக அருகாக தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு செல்ல முடியாது, குழாய்களைக் கொண்டு சென்று தீயை அணைக்க முயலும் முன் காரியம் முடிந்து விடுகிறது. இந்தப் பகுதிகளில் நிரந்தரமாகத் தண்ணீரை அதற்கான தொட்டிகளில் வைத்திருப்பதையும் ‘சாலிட் ஹைட்ரன்ட்’ முதலான தொழில் நுட்ப வசதிகளையும் செய்ய வேண்டும். ஆனால் அரசு இதற்கு முன்னுரிமை அளிப்பதில்லை” என்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் மக்கீஸ் கார்டனில் சுமார் 200 குடிசைகள் மூன்று வாரங்களில் தவணை முறையில் எரிந்து சாம்பலாயின. எல்லாவற்றையும் மின்கசிவு எனச் சொல்லி மேல் விசாரணை இல்லாமல் வைத்திருந்தார்கள், இது குறித்து ஆயிரம் விளக்குக் காவல் நிலையத் துணை ஆய்வாளரிடம் கேட்டோம். மக்களின் ஐயங்களைச் சொல்லி, இப்படித் தவணை முறையில் எரிவதெல்லாம் நம்பும்படியாக இல்லையே, அவர்களை வெளியேற்றுவதற்கான சதி முயற்சி என்கிற கோணத்தில் இதை விசாரிக்க முடியாதா எனக் கேட்டோம். அவர் சிரித்தார். “அப்படீன்னா, அரசாங்கமே இப்படிச் செய்யுது என்று விசாரிக்கணும் என்கிறீங்களா? அது எப்படி சார் முடியும்? அரசாங்கம் மக்களுக்கு நல்லதுதானே செய்யும்?” என்றார். ஆக, போலீஸ் விசாரணை மூலம் இந்தத் தீவிபத்துக்கள் குறித்த உண்மைகள் வெளிவராது.

இன்று சென்னையில் நான்கைந்து முக்கிய வளர்ச்சித் திட்டங்கள் செயலில் உள்ளன. துறைமுகம் அருகிலுள்ள போர் நினைவுச் சின்னத்திலிருந்து மதுர வாயில் வரை கூவம் ஆற்றின் ஓரமாகவும், அடையாறு மலர் மருத்துவ மனையிலிருந்து போரூர் நந்தம்பாக்கம் வரையில் அடையாற்றங்கரை ஓரமாகவும், எண்ணூர்- பேசின் பிரிட்ஜ்- வால்டாக்ஸ் சலை வழியாக பக்கிங்ஹாம் கால்வாய் ஓரமாகவும் கட்டப்படும் அதி வேக உயர் நெடுஞ்சாலைகள் இவற்றில் முக்கியமானவை. இந்த நதிக்கரை ஓரங்களில்தான் பெரும்பாலான குடிசைப் பகுதிகள் உள்ளன. மிகவும் சுகாதாரக் கேடான, எந்த வசதியும் இல்லாத இந்தச் சாக்கடைக் கரையோரங்களில்தான் புழுக்களைப்போல நம் மக்கள் வசித்து வருகின்றனர், நகர்ப் புறத்தில் அமைந்துள்ள வாழ்வாதாரங்களுக்காகவும், பிள்ளைகளின் படிப்பிற்காகவும் எல்லாக் கொடுமைகளையும் சகித்துக் கொண்டு இவர்கள் காலங் காலமாக இங்கே வசித்து வருகின்றனர். இந்த வளர்ச்சித் திட்டங்களை ஊக்குவித்துக் கடன் தரும் உலக நிதி நிறுவனங்களின் நிபந்தனைகளுக்குத் தக இன்று நமது அரசுகள் நகர்ப்புறக் குடியிருப்பு உருவாக்கம் தொடர்பான தனது கொள்கைகளில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளன. குடிசைகள் இருந்த இடங்களிலேயே உறுதியான வீடுகளைக் கட்டித் தருவது, வசதிகளை மேம்படுத்துவது என்பதற்குப் பதிலாக, குடிசை மக்களை நகர் மையங்களிலிருந்து வெளியேற்றி தூரமாகக் கொண்டு சென்று பிற குடிமக்களிடமிருந்துப் பிரித்துக் குடியேற்றுவது என்பது இன்றைய அணுகல் முறையாக உள்ளது. இந்தப் பின்னணியில் இந்தத் தீவிபத்துக்கள் மிகுந்த சந்தேகத்திற்குரியவைகளாக உள்ளன. இதனை நமது காவல்துறை விசாரித்தால் உண்மைகள் வெளிவராது. எனவே கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள குடிசைப் பகுதி தீ விபத்துக்கள் குறித்து நீதி விசாரணை ஒன்று வேண்டும் என்கிறோம்.

வெண்மணி: உலக நிதி நிறுவனங்களின் தலையீட்டால் மத்திய மாநில அரசுகள் குடிசை மாற்று தொடர்பான தமது அணுகள் முறைகளில் பெரிய மாற்றங்களைச் செய்துள்ளன என்று சொன்னீர்கள். இதைச் சற்று விளக்க முடியுமா?

அ.மா: மிகவும் விரிவாகப் பேசப்பட வேண்டிய ஒன்று இது. கூடிய வரை சுருக்கமாகச் சொல்வதானால், சுதந்திரத்திற்குப் பிந்திய ஆண்டுகளில், குறிப்பாக அறுபதுகள் தொடங்கி கிராமப் புறங்களிலிருந்து பெரிய அளவில் அடித்தள மக்கள் நகரங்களுக்கு, அதிலும் குறிப்பாகச் சென்னை நகரத்திற்கு இடம் பெயர்ந்தார்கள். அரசின் தவறான கொள்கைகள், கிராமப்புறம் மற்றும் விவசாய வளர்ச்சியில் போதிய அக்கறை காட்டாமை, நேரு காலத்தியத் தொழில் முயற்சிகள் யாவும் நகரங்களை மையப்படுத்தி இருந்தது முதலியன இப்படியானதற்குக் காரணங்களாக இருந்தன. இவர்கள் ஆக அடித்தள மக்கள் மட்டுமல்ல. ஆக அடித்தளச் சாதிகளையும் சேர்ந்தவர்கள். இன்று சென்னையிலுள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 25 முதல் 30 சதம் வரை குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களாகவும், வீடற்றவர்களாகவும் உள்ளனர். வீடற்றவர்கள் என்பது நடைபாதை ஓரங்கள் முதலானவற்றில் ஒண்டியிருப்பவர்கள். இந்தக் குடிசை வாழ் மக்கள் மற்றும் வீடற்றோர்களில் 90 சதம் பேர் தலித்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

வெண்மணி: ஆகக் குடிசைவாழ் மக்களின் பிரச்சினைகளை ஒரு தலித் பிரச்சினையாகவும் பார்க்க வேண்டும் அல்லவா?

அ.மா: நிச்சயமாக. அதைத்தான் சொல்ல வருகிறேன். இங்கிருந்த பாரம்பரியமான தலித்கள், கடலோரங்களில் வசித்த மீனவர்கள், ரிக்‌ஷா இழுப்பவர்கள் முதலான உதிரித் தொழிலாளிகள் போன்றோரில் பெரும்பகுதியும் உறுதியான வீடுகளின்றிக் குடிசைப் பகுதிகளில் வசித்தவர்கள்தான் என்பதையும் நாம் மறந்து விடக் கூடது. எனினும் புதிதாக இடம்பெயர்ந்து வந்த அடித்தளச் சாதியினர் நகரத்தில் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்ட அசுத்தமானப் பகுதிகளில், குறிப்பாக இன்று சாக்கடைகளாக மாறிப்போன நதிக்கரைகளில் குடிசைகள் அமைத்துக் குடியேறினர். இவர்களில் 90 சதம் பேர் தலித்களாகவே இருந்தபோதும் சென்னை நகரத் தலித்கள் என்றால் பரம்பரியமாக இங்கிருந்த தலித்கள் மட்டுமே மனம் கொள்ளப்பட்டனர். புதிதாகக் குடியேறிய இந்தக் குடிசை மக்களைத் தலித்களாகப் பார்க்கும் வழமை இங்கில்லை. சாதி என்பதை பிறப்புடனும் பிறந்த நிலத்துடனும் (Nativity) தொடர்புபடுத்திப் பார்க்கும் நமது மனநிலையும் இதற்கொரு காரணமாக இருக்கலாம்.

இறுக்கமான மார்க்சீய வரையறையின்கீழ் இவர்கள் “தொழிலாளி வர்க்கமாகவும்” கருதப்படவில்லை. வேலை உறுதி, தொழிற் கள உரிமைகள் எதுவும் இல்லாமல் துண்டு துக்காணி வேலைகள் (piecemeal works) செய்து வாழ்பவர்கள் இவர்கள். வீட்டு வேலைகள் செய்வது, கார்ப்பொரேஷன் பள்ளி வாயில்களில் நாவற் பழம், மலிவான மிட்டாய்கள் முதலியவற்றை விற்பது, பூ விற்பது, வண்ணம் பூசுவது, வண்டி இழுப்பது, மெக்கானிக் ஷாப்களில் இரும்பு அடிப்பது, சாவு மேளம் அடிப்பது, பாலியல் தொழிலாளியாகச் செயல்படுவது, சிறு குற்றச் செயல்களில் ஈடுபடுவது, கட்டிடத் தொழிலாளிகளாக ஒப்பந்தக் காரர்களிடம் பணிபுரிவது, குழந்தைத் தொழிலாளிகளாக ஓட்டல்கள் முதலானவற்றில் வேலை செய்வது, குப்பை பொறுக்குவது, குழி தோண்டுதல், லாரிகளில் சுமை ஏற்றுதல் முதலானக் கடின வேலைகளைச் செய்வது முதலியன இவர்களில் பெரும்பாலானோரது தொழில்கள். இந்தத் தொழில்களில் பல கடினமானவை மட்டுமல்ல, பாலியல் சுரண்டல் மட்டுமின்றிப் பல்வேறு வகையான சுரண்டல்களுக்கும் வழி வகுப்பவை. இப்படியான உதிரித் தொழில்களைச் செய்து வந்தவர்கள் என்பதால் இவர்கள் “தொழிலாளி வர்க்கமாகவும்” கருதப்படவில்லை.

ஆக வர்க்க அடிப்படையில் அணி திரட்டியவர்கள், ஒடுக்கப்பட்ட சாதிகளைத் திரட்டியவர்கள் எல்லோராலும் புறக்கணிக்கப் பட்டவர்களாகவும் கைவிடப்பட்டவர்களாகவும் இவர்கள் இருந்தனர்; இருக்கின்றனர்.

1967ல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் அணுகல் முறைகளிலிருந்து அவர்கள் பல அம்சங்களில் வேறுபட்டனர், தங்களுடைய ஆதரவு சக்திகளாக இருந்த குடிசை வாழ் மக்கள் முதலானோருக்கு உடனடிப் பலன்கள் கிட்டுமாறு சில திட்டங்களை அவர்கள் நடைமுறைப் படுத்தினர். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட குடிசை மாற்று வாரியம் மற்றும் 1971ம் ஆண்டு நகரத் திட்டமிடல் சட்டம் முதலியன இந்த வகையில் குறிப்பிடத்தக்கவை.

“ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்பதைக் குறிக்கோள் வாசகமாகக் கொண்டு 1970 டிசம்பர் 23 அன்று நொச்சிக்குப்பத்தில் உருவாக்கப்பட்ட 1000 குடியிருப்புகளுடன் ‘தமிழ்நாடு குடிசை மற்று வாரியத்தை’த் துவக்கி வைத்த அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, இன்னும் ஏழாண்டுகளில் சென்னை நகரில் உள்ள குடிசைகள் எல்லாவற்றையும் ஒழித்து விடுவதாகச் சூளுரைத்து அதற்கென 40 கோடி ரூபாய்களை ஒதுக்கவும் செய்தார். 1971ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி சென்னையிலுள்ள குடிசை வாழ் மக்களின் என்ணிக்கை 7.37 இலட்சம். 2001ம் ஆண்டுக் கணக்கின்படி இது 10.79 இலட்சம். இது மொத்தச் சென்னை மக்கள்தொகையில் 26 சதம். இன்றைய நிலையில், நடைபாதையில் வசிப்போர்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் இது உயர்ந்த பட்சம் 30 சதமாக இருக்கலாம்.

திமு.க அரசு தான் அறிவித்த குறிக்கோளை நிறைவேற்ற இயலாமற் போனதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கலாம். ஆனால் தொடக்கத்தில் இது தொடர்பாக அது கொண்டிருந்த அணுகல் முறை உண்மையில் வரவேற்கப்படக் கூடிய ஒன்று. குடிசைகளை ஒழித்து அந்த இடங்களிலேயே குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளை உருவாக்குவது என்பதில் குடிசை மக்கள் அதே இடங்களில் குடியமர்த்தப் படுவது என்பது முக்கிய அம்சமாக இருந்தது. நொச்சிக்குப்பம், டூமிங்குப்பம், அயோத்தி குப்பம் முதலான மீனவர் பெரும்பான்மையாக இருந்த பகுதிகளில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் இப்படித்தான் உருவாயின. இராம.அரங்கண்ணல் போன்ற கட்சித் தலைவர்கள் குடிசை மாற்று வாரியத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். கட்டப்பட்ட குடியிருப்புகளை யாருக்கு அளிப்பது என்கிற அதிகாரம் வாரியத் தலைவருக்கு அளிக்கப்பட்டது. மாநில அரசு நிதி ஒதுக்கீடு, ‘ஹட்கோ’ போன்ற நிறுவனங்களிடமிருந்து பெற்ற நிதி உதவி ஆகியவற்றின் மூலம் இவை நிறைவேற்றப்பட்டன.

ஆனால் அடுத்தடுத்த நிலைகளில் உலக நிதி நிறுவனங்கள் இதில் தலையிட்டு மிகப் பெரிய கொள்கை மாற்றங்களுக்கு வழி வகுத்தன. இதன் முக்கியமான அம்சம் என்னவெனில் குடிசை மக்களை நகர மையத்திலிருந்து வெளியேற்றி வெகு தொலைவில் கொண்டு சென்று பிற நகர மக்களிலிருந்துப் பிரித்துக் குடியேற்றுவது என்பதே. 1972லிருந்து உலக வங்கியின் தலையீடு தொடங்கியது. இதற்கென அது சில கொள்கை அறிக்கைகளையும் உருவாக்கியது, Urbanisation (1972), Sites and Services Projects (1974), Housing (1975) முதலியன இவற்றில் சில. இது குறித்து நித்யா ராமன் விரிவாக ஆய்வு செய்துள்ளார் (EPW, July 30, 2011). குடிசை மாற்று நடவடிக்கைகளில் அரசியல் தலையீட்டைக் குறைத்து அதிகாரவர்க்க மயப்படுத்துவது (bureucritisation), மக்கள் நலன் என்பதைக் கட்டிலும் இந்தத் திட்டங்களுக்காகச் செலவிடப்படும் நிதியை எவ்வாறு சிக்கனமாகவும் மீட்டெடுக்கும் வகையிலும் பயன்படுத்துவது முதலான அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. முன்னதாக நான்காம் நிலை அரசு ஊழியர்களுக்கு இக்குடியிருப்புகள் வழங்கப்படும்போடு அவர்கள் மாதந்தோறும் வெறும் 10 ரூபய்கள் கொடுத்தால் போதுமானது எனவும், வைப்புத் தொகையான 500 ரூபாயையும் கூட அவர்கள் கட்ட வேண்டியதில்லை எனவும் தி.மு.க அரசு உத்தரவிட்டிரூந்தது குறிப்பிடத்தக்கது.

1977ல் மொத்தத் திட்டத் தொகையான 62 மில்லியன் டாலரில் 24 மி டாலரை உலக வங்கி கடனாக அளித்தது. சென்னை நகர வளர்ச்சித் திட்டம்1 (MUDP 1) என இதற்குப் பெயர். 1980-88ல் MUDP 2க்கு 42மி டாலரும், 1988-97 காலகட்டத்தில் தமிழ்நாடு நகர வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில் 255 மி டாலரும் கடனளிக்கப்பட்டது. குடிசைப் பகுதி மக்களை அவர்களிடத்திலிருந்து வெளியேற்றாமல் அவரவர் இடங்களிலேயே குடிசை மாற்று வாரியக் கட்டிடங்களை கட்டிக் குடியமர்த்துவது என்கிற தமிழக அரசின் கொள்கையை உலக வங்கி வெறுப்புடன் பார்த்தது. நகருக்கு வெளியே இடங்களைக் கண்டுபிடித்து அங்கே தங்குவதற்கான ‘வசதிகளை ஏற்படுத்தி’ தகுதியானவர்களுக்கு அளிப்பது, கூடியவரை கட்டிடங்களாகக் கட்டி அளிப்பது என்பதைத் தவிர்ப்பது, அரசு மாநியங்களைப் பெரிய அளவில் குறைப்பது, வாரியத் தலைவர் பதவிகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமிப்பது முதலியன உலகி வங்கியின் கொள்கைகளாக அமைந்தன. கட்டப்பட்ட வீடுகளைப் பயனாளிகளுக்கு அளிக்கும்போது, அவர்களிடமிருந்து உடனடியாகக் கட்டுமானச் செலவில் பத்து சதத்தை வசூலிப்பது, மீதத் தொகையை 12சத வட்டியில் 20 ஆண்டுகளில் வசூலிப்பது முதலியன உலக வங்கி ஏற்படுத்திய சில மாற்றங்கள். முன்னதாக 4 சத வட்டியே பயனாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

இப்படித் தொடங்கியதுதான் குடிசை மக்களை நகர மையத்திலிருந்து வெளியேற்றி ஓக்கியம், துரைப்பாக்கம், பெரும்பாக்கம் முதலான இடங்களுக்குக் கொண்டு செல்வது என்பது. 1986ல் மெரீனா கடற்கரையை அழகு படுத்துவது என்கிற பெயரில் மீனவர் குடியிருப்புகளக் காலி செய்ய எம்.ஜி.ஆர் அரசு நடவடிக்கை மேற்கொண்டதும், இடம்பெயர மறுத்த மீனவர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 6 பேர்கள் கொல்லப்பட்டதும் இந்தப் பின்னணியில்தான் நடந்தது.

வெண்மணி: சென்னைக்குள் இனி குடிசை மாற்று வாரியக் கட்டிடங்களே கட்டுவது இல்லை என்பதுதான் அரசு முடிவா?

அ.மா: ஆமாம். அரசு அப்படித்தான் முடிவெடுத்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பு மக்கீஸ் கார்டனில் குடிசைகள் எரிந்ததையொட்டி நாங்கள் குடிசை மாற்று வாரியத்தில் விசாரித்தபோது இத்தகைய பதில்தான் வந்தது. பட்டினப்பாக்கம் தவிர இனி சென்னைக்குள் குடிசை மாற்றுக் கட்டிடங்கள் கட்டுவதற்கான திட்டமே இல்லை என உறுதியாகச் சொன்னார்கள். மேயர் சைதை துரைசாமியும் அதைத்தான் சொன்னர். “சென்னைக்குள் எங்கே சார் இடமிருக்கு? இருந்தா காட்டுங்க, அம்மாட்ட சொல்லி உடனே கட்டித் தருகிறேன்” என்றார்.

வெண்மணி: அவர்கள் சொல்வது உண்மைதானா? சென்னை நகர மையத்தில் இனிமேல் இடமே கிடையாதா?

அ.மா: இல்லை. அது தவறான கருத்து. தவறு என்பதைக் காட்டிலும் அது முழுப் பொய். இது குறித்து நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இது தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து வரும் “Transparent Chennai’ என்கிற அமைப்பு சில முக்கிய தகவல்களை முன்வைத்துள்ளது.

அதன்படி. சென்னை நகருக்குள் புதிதாகக் குடிசைக் குடியிருப்புகள் தோன்றிக் கொண்டே இருந்த போதிலும் 1985க்குப் பின் புதிய குடிசைப் பகுதிகள் ஏதும் அராசால் அங்கீகரிக்கப் படவில்லை. ஆனால் புதிய குடிசைப் பகுதிகள் உருவாகும்போது அவற்றைக் கண்டறிந்து அங்கீகரிக்க வேண்டுமென்பது விதி. கடைசியாக இது குறித்த விரிவான ஆய்வு 1971ல் செய்யப் பட்டது. அப்போது 1202 புதிய குடிசைப் பகுதிகள் அடையாளம் கண்டு அறிவிக்கப் பட்டன. அதற்குப் பின் 1985ல் அந்தப் பட்டியலில் மேலும் 17 குடியிருப்புகள் புதிதாகச் சேர்க்கப்பட்டன. அவ்வளவுதான்.அதன்பின் நூற்றுக்கணக்கான புதிய குடிசைப் பகுதிகள் உருவாகியிருந்த போதிலும் அரசு அவற்றைக் கண்டு கொள்ளவில்லை. சிலவற்றில் வாழ்ந்தவர்கள் உரிய விதிமுறைகள் எதையும் பின்பற்றாமல் வெளியேற்றப் பட்டுள்ளனர்.

ஆனால் இப் புதிய குடிசைப் பகுதிகள் அனைத்தும் சென்னை நகரத்திற்குள் மிகக் குறைந்த சிறு நிலப் பரப்பிலேயே அமைந்துள்ளன. குடிசை மாற்று வாரியம் 2002ல் மேற்கொண்ட ஒரு கணக்கெடுப்பின் படி இந்த அங்கீகரிக்கப் படாத புதிய குடிசைப் பகுதிகள் சென்னை நகரின் மத்தியப் பகுதியில் வெறும் 1.7 சதுர கி.மீ பரப்பிலேயே அமைந்துள்ளன. மொத்தச் சென்னைப் பெரு நகரப் பகுதியிலும் வெறும் 4.8 சதுர கி.மீ பரப்பில்தான் இவை உள்ளன. இது விரிவாக்கப் பட்ட கார்பொரேஷனின் மொத்தப் பரப்பில் வெறும் 1.1 சதம் மட்டுமே.

தகவல் அறியும் உரிமைச் சட்டதைப் பயன்படுத்தி பாடம் நாராயணன் அறிந்துள்ள ஒரு தகவலின்பட்டி நகர்ப்புற நில உச்ச வரம்புச் சட்டத்தைப் பயன்படுத்தி சென்னை முழுவதிலும் அரசு கையகப் படுத்தியுள்ள மொத்த நிலத்தில் பயன்படுத்தப் படாது கைவசமுள்ள நிலம் 10.42 சதுர கி.மீ. ஆக அரசு நினைத்தால் இந்தக் குடிசைப் பகுதிகளில் வாழும் அனைத்து மக்களையும் அவர்களின் வாழ்வை அழிக்காமல் சென்னை நகருக்குள்ளேயே குடியமர்த்த இயலும். வெறும் 4.8 சதுர கி.மீயில் சுகாதாரமற்ற குடிசைகளில் வாழும் இவர்களை உபரியாக உள்ள 10.42 சதுர கி.மீ பரப்பில் குடியேற்ற முடியாதா என்ன?

ஆனால் சிங்காரச் சென்னைக்குப் பொருத்தமற்ற அழுக்குகளாகக் கருதி இம்மக்களை செம்மஞ்சேரி முதலான பகுதிகளுக்கு வெளியேற்றுவதிலேயே குறியாய் இருக்கும் அரசுகள் நகருக்குள் இடமே இல்லை எனச் சாதிக்கின்றன. குடிசைப் பகுதிகள் எரியும்போது அந்த இடத்திலேயோ, இல்லை 5கி.மீ சுற்றளவுக்குள் இடம் ஒன்றை அரசு கைப்பற்றியோ அதில் அவர்களுக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டித் தரவேண்டும். இத்தகைய பரிந்துரைகளையும் கோரிக்கைகளையும் வைக்கும்போது அப்படி ஒரு இடம் இருந்தால் சொல்லுங்கள் எனக் கோரிக்கை வைப்பவர்களிடமே அரசு தரப்பில் பதிலுரைப்பது மிகவும் பொறுப்பற்ற ஒரு செயல். அரசிடமே இது குறித்துப் போதுமான தகவல்கள், ஆவணங்கள் முதலியன இருக்கும். நிறைய அரசு நிலங்கள் முதலியவற்றைத் தனியார்கள் ஆக்ரமித்துள்ளனர். பஞ்சமி நிலங்கள், வக்ஃப் நிலங்கள் ஆகியவையும் இவ்வாறு ஆக்ரமிக்கப் பட்டுள்ளன. சென்னை நகருக்குள் இது போன்ற சாத்தியமுள்ள இடங்களைச் சம்பந்தப் பட்ட அரசுத் துறைகளின் மூலம் கண்டுபிடித்து அதன் பட்டியலொன்றை வெளியிட வேண்டும். வளர்ச்சி, மற்றும் சென்னையை அழகு படுத்தல் குறித்த மேட்டிமைப் பார்வையிலேயே நின்று கொண்டு பிரச்சினையை அணுகினால் நகருக்குள் இடமில்லை என்பதுதான் பதிலாக வரும். குடிசை வாழ் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்கிற நோக்கிலிருந்து பிரச்சினையை அணுகினால் வேறு தீர்வுகள் நமக்குக் கிடைக்கும். ஆனால் அரசுகள் மாறினாலும் அவற்றின் அணுகல் முறைகள் குடிசை மக்களின் வாழ்வுரிமையைக் காக்கும் திசையில் இல்லை.

வெண்மணி: ஏன் இப்படிக் குடிசைப் பகுதிகளை அங்கீகரிக்க மறுக்கிறார்கள்? செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் முதலான இடங்களில் கட்டப்பட்டுள்ள, கட்டப்பட்டு வருகிற அடுக்குமாடிக் கட்டிடங்களைப் பார்த்துள்ளீர்களா? அது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அ.மா: எந்த வகையிலும் குடிசைப் பகுதி மக்களுக்குச் சட்டபூர்வமான நிலை அளித்துவிடக் கூடாது என்பதுதான். இவர்களை எப்போதும் சட்ட விரோத ஆக்ரமிப்பாளர்களாக வைத்துக் கொள்ளவே அரசு விரும்புகிறது. நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். குடிசைப் பகுதிகள் பலவற்றில் மக்கள் தாமாகவே மின் இணைப்புகளைக் கொடுத்துக் கொள்கின்றனர். அசோக் பில்லர் அருகிலுள்ள அம்பேத்கர் காலனிக்கு நாங்கள் சென்றபோது எரிந்து போன இடங்களில் அவர்கள் அமைத்திருந்த தற்காலிகக் குடியிருப்புகளுக்கு அவர்களாகவே இணைப்புக் கொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். அரசுக்கும் மின்சார வாரியத்திற்கும் இதெல்லாம் தெரியும். ஆனாலும் இந்த “மின் திருட்டு” அறிந்தே அனுமதிக்கப் படுகிறது. குடிசை வாழ் மக்களை பிற குடிமக்களுக்குச் சமமானவர்களாக நடத்த அரசு விரும்பவில்லை. அவர்களை ஒருவகைச் சட்ட விரோதக் குடிமக்களாகவும், குற்ற நிலையினராகவுமே வைத்துக்கொள்ள அரசு நினைக்கிறது. குடிசைப் பகுதிகளை அங்கீகரித்தால், அவர்களை நினைத்தபடி வெளியேற்ற இயலாது. சில விதி முறைகளைப் பின்பற்றியாக வேண்டும்.

செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் முதலான இடங்களுக்குச் சென்றிருக்கிறோம். கண்ணகி நகர் போன்ற இடங்களில் உள்ள இந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளின் நிலை பற்றி எங்கள் அறிக்கையில் விரிவாகப் பேசியுள்ளோம். முன்பிருந்த இடங்களிலிருந்து சுமார் 20,30 கி.மீ தொலைவில் இவர்கள் இடம்பெயர்த்துக் குடியமர்த்தப்படும்போது முதலில் அவர்கள் வாழ்வாதாரம் அழிந்து விடுகிறது. வீட்டு வேலைகள் செய்து கொண்டிருந்த பெண்கள் அவற்றைத் தொடர இயலுவதில்லை. பிள்ளைகள் படிக்க முடிவதில்லை. குடிநீர் உட்பட அடிப்படை வசதிகள் கிடையாது. கடன், கந்து வட்டி, கள்ளச் சாராயம், ராவுடியிசம், தற்கொலைகள், இப்படித்தான் அங்கே வாழ்க்கை அமைந்துள்ளது.

இப்போது பெரும்பாக்கத்தில் ‘ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற மேம்பாட்ட்த் திட்ட’த்தின் கீழ் மிகப் பெரிய மெகா குடியிருப்பு ஒன்றை அரசு கட்டிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் 950 கோடி ரூபாய் நிதியில் இது கட்டப்பட்டு வருகிறது. இது ஒரு எட்டு மாடி வளாகம். 27,158 வீடுகள் இங்கே கட்டபடுகிறதாம். ஒவ்வொரு வீடும் 200 சதுர அடியாம். இப்படியான மெகா குடியிருப்புத் திட்டம் மிக மிக மோசமானது. முதலில் இவ்வாறு அடித்தள மக்களை சமூகத்திலிருந்து பிரித்துக் கொண்டு சென்று ஒதுக்கி வைப்பது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. அடுத்து, இந்த ஜவஹர்லால் நேரு திட்டம், ராஜீவ் அவாஸ் யோஜனா (JNNURM / RAY) என்பனவெல்லாம் நகர்ப்புறங்களில் உள்ள குடிசைகளை அந்த்தந்த இடங்களிலேயே (in situ) வைத்து மேம்படுத்துவது என்பதுதான். இவ்வாறு குடியிருப்புப் பகுதிகளிலிருந்து 30 கி.மீ தொலைவில் புதிய குடியிருப்புகளைக் கட்டுவதற்கு இந்த நிதியைப் பயன்படுத்துவது தவறு.

பெரும்பாக்கம் குடியிருப்பில் எல்லாவிதமான வசதிகளையும் அரசு செய்து தரும் எனச் சொல்வதையும் நாம் நம்ப இயலாது. பாடம் நாராயணன் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்றுள்ள தகவலின்படி அங்கே 20 அங்கன்வாடிகள் 3 நர்சரிப் பள்ளி, 5 தொடக்கப் பள்ளிகள், 2 உயர்நிலப் பள்ளிகள், 2 மேல் நிலைப் பள்ளிகள், 1 கல்லூரி, 1 விடுதி, 50 படுக்கைகள் உள்ள ஒரு மருத்துவமனை எல்லாம் கட்டித்தரப்படுமாம். ஒவ்வொரு வீட்டிலும் 5 பேர்கள் இருப்பதாகக் கொண்டால் பெரும்பாக்கம் குடியிருப்பில் உள்ள 27,158 வீடுகளிலும் 1,35,790 பேர் இருப்பார்கள். இவர்களுக்கு எப்படி 50 படுக்கை கொண்ட மருத்துவமனை போதும்? குறைந்த பட்சம் 100 அங்கன்வாடிகள் 20 பள்ளிகள் தேவைப்படாதா? அடுக்கு மாடிக் குடியிருப்பில் 20 க்கும் மேற்பட்ட லிஃப்ட்கள் பொருத்தப்படுமாம். எவ்வளவு காலத்திற்கு இவை ஒழுங்காக வேலை செய்யும்? இப்படி எத்தனையோ கேள்விகள் உள்ளன.

4 அல்லது 5 ஆயிரங்களுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இப்படி ஒரே இடத்தில் கட்டுவது மிகப் பெரிய அபத்தம். அரசு அதிகாரிகளே இந்த முட்டாள்தனமான திட்டத்தை எதிர்த்துள்ளதாக அறிகிறோம். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

வெண்மணி: இன்று நிறைய செய்திகளைப் பகிர்ந்து கொண்டோம். சென்னை நகரக் குடிசை வாழ் மக்கள் சந்திக்கும் இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக முன்னுரிமை அளித்துச் செயல்படுத்த வேண்டிய திட்டங்களாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

அ.மா: நிறைய செய்திகளைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்ததற்கு மிக்க நன்றி. உலகமயம் பல்வேறு தளங்களில் அடித்தள மக்களின் வாழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. “தேச அரசுகள் தனியார் மயப் படுத்தப்படல்” (privatization of nation states) என்கிற நிலை உருவாகி வருவதாக அர்ஜுன் அப்பாத்துரை போன்றோர் குறிப்பிடுகின்றனர். அரசு செய்ய வேன்டிய பல பணிகள் இன்று தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு ‘அவுட் சோர்ஸ்’ செய்யப்படுகின்றன. உலக வங்கி போன்றவை தேச அரசுகளின் கொள்கை உருவாக்கங்களிலும், நிறைவேற்றங்களிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுதந்திரத்திற்குப் பிந்திய தொழிற் பொருளாதாரம் என்பது இன்று சேவைப் பொருளாதாரத்திற்கு முதன்மை அளித்தல் என்கிற நிலைக்குச் சென்றிருக்கிறது. ஒரு காலத்தில் நகருக்குள் இரு வர்க்கத்தினரும் வர்க்க வேறுபாடுகள் இருந்தபோதிலும் அருகருகே வாழ்ந்த நிலை இப்போது மாறி வருகிறது. உலகத் தரமான, எல்லா அகக்கட்டுமானங்களும் உள்ள நகரங்களுக்கே அந்நிய முதலீடு வந்து குவியும் நிலை உள்ளது. எனவே மைய நகர்ப் பகுதியில் குடிசைகளுக்கும், அதில் வசித்த மக்களுக்கும் இடமில்லை என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. முன்பெல்லாம் இரு வக்கத்தினரும் தத்தம் வேறுபாடுகளுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய பொது வெளிகள் இருந்தன. ஒரே திரை அரங்கில் பால்கனியில் மேல் தட்டினரும், தரையில் அடித்தள மக்களும் சினிமா பார்ப்பது என்கிற நிலை இன்று இல்லை. மேல் தட்டினருக்கென இனாக்ஸ் தியேட்டர்கள் உருவாகிவிட்டன. இந்தத் திரையரங்குகளில் உள்ள கான்டீன்களில் உள்ள உணவை ஃப்ரென்ச் செஃப்கள் தயாரிக்கின்றனர். ஒரே காய்கறிக் கடையில் இரு சாரரும் காய் கனிகள் வாங்குவது என்கிற நிலை இப்போது இல்லை. முன்னைப்போலக் கஞ்சத் தனம் இல்லாமல் தாராளமாகச் செலவு செய்கிற ஒரு மத்தியதர வர்க்கம் இப்போது உருவாகியுள்ளது. எனவே இரண்டு சென்னைகள் உருவாவது என்பதை இன்றைய மனநிலை ஏற்றுக் கொண்டுவிட்டது. இந்தப் பின்னணியிலிருந்துதான் குடிசை மக்களின் பிரச்சினைகளை நாம் பார்க்க வேண்டும்.

எங்களைப் போன்றவர்கள் பிரச்சினைகள் உருவாகும்போது அவை குறித்த உண்மைகளை வெளிக் கொணர்வது என்கிற மட்டத்திலேயே செயல்பட முடியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி போன்ற அமைப்புகள்தான் குடிசை மக்களை ஒன்றிணைத்து அவர்களின் உரிமைகளுக்காகப் போராட முடியும். தீண்டாமைப் பிரச்சினைகளில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆற்றி வரும் பணிகள் முக்கியமானவை.. குடிசை வாழ் மக்களின் பிரச்சினையும் ஒரு தலித் பிரச்சினைதான் என்பதை நாம் முதலில் மனம்கொள்ள வேன்டும். கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட தீ விபத்துகள் குறித்த ஒரு நீதி விசாரணையை நாம் கோர வேண்டும். நகர்ப்புற உச்ச வரம்புச் சட்டத்தின் கீழ் உபரியாக அறிவிக்கப்பட்டுள்ள மொத்த நிலங்களின் விவரங்களைப் பெற்று, அவை இன்றுள்ள நிலை, ஆக்ரமிக்கப் பட்டிருந்தால் இன்று யாரிடம் அந்த நிலங்கள் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து, அங்கு குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளைகளைக் கட்ட வேண்டும் எனப் போராட வேண்டும். இனி யாரையும் வெளியேற்றுவதில்லை என்கிற கொள்கை அறிவிப்பை நோக்கி நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும். 1985க்குப் பின் உருவாகியுள்ள குடிசைப் பகுதிகளை அடையாளம் கண்டு அவற்றை அங்கீகரித்து அறிவிப்புச் செய்யக் கோர வேண்டும். பெரும்பாக்கத்தில் கட்டப்படுகிற இந்த ஆபத்தான திட்டத்தைக் கைவிடக் கோரிப் போராட வேண்டும். இத்தகைய போராட்டங்களின் ஊடாகக் குடிசை மக்களை ஓரணியில் திரட்ட வேண்டும்.

உளவுத் துறையிடம் காவல் அதிகாரம் இருக்கக் கூடாது

(‘மக்கள் ரிபோர்ட்’ இதழில் பிரசுரமான எனது பேட்டி)

கடந்த 19ம் தேதி அன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த தமிமுன் அன்சாரி என்கிற வெங்காய வியாபாரி இந்திய இராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்கு கடத்த முயன்றதற்காகவும், இந்தியாவை சீர்குலைப்பதற்காக வெளிநாட்டு சக்திகளோடு இணைந்து சதி வேலையில் ஈடுபட்டதற்காகவும் கைது செய்யப்பட்டார் என்று ஊடகங்கள் வழியாக செய்தி சொன்னது திருச்சி கியூ பிரிவு போலீஸ்.

அன்சாரி கைது விவகாரத்தில் போலீஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதால் அது குறித்த உண்மை நிலை என்ன என்பதை கண்டறிவதற்காக பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு தஞ்சைப் பகுதியில் முகாமிட்டிருக்கும் தகவல் கிடைக்கவே மக்கள் ரிப்போர்ட்டுக்காக பேராசிரியர் அ. மார்க்ஸை நேரில் சந்தித்தோம். இந்த வழக்கு தொடர்பாக தனது குழுவுடன் சென்று கண்டறிந்த உண்மைகளையெல்லாம் தொகுத்து திருச்சி பிரஸ் கிளப்பில் 24-09-2012 அன்று அறிக்கையாக வெளியிடுவதற்காக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையிலும் மக்கள் ரிப்போர்ட்டுடனான நேர்காணலுக்கு நேரம் ஒதுக்கித் தந்தார் அ. மார்க்ஸ். அவருடனான நேர்காணலை வாசகர்களுடன் பரிந்து கொள்கிறோம்.

மக்கள் ரிப்போர்ட்: உண்மை அறியும் குழுவில் யார் யார் இடம் பெற்றிருக்கிறார்கள்?

மார்க்ஸ்: நான், கோ. சுகுமாரன், எஸ்.வி. ராஜதுரை, பேராசிரியர் பிரபா கல்விமணி, பேரா. கோச்சடை, வழக்குரைஞர் கமருத்தீன் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறோம்.

ம.ரி : உண்மை அறியும் குழுவின் நோக்கம்தான் என்ன?

மார்க்ஸ் : காவல்துறையினரால் பாரதூரமான குற்றச்சாட்டுகள், பெரிய வழக்குகள் போடப்படும்போது, அதில் ஏதும் சந்தேகங்கள் இருந்தால் அதிலுள்ள உண்மைத்தன்மையை அறிந்து அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் சொல்வதுதான் எங்கள் நோக்கம்.

ம.ரி: அதிராம்பட்டினம் அன்சாரி மீது அப்படியென்ன குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கிறது போலீஸ்?

மார்க்ஸ்: அன்சாரி இந்திய இராணுவ ரகசியங்களை இலங்கைக்கு கடத்த முயன் றதாகவும், இந்தியாவின் இறையாண்மையை சீர்குலைக்க வெளிநாட்டு சக்திகளோடு சேர்ந்து சதி செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ம.ரி: இந்த குற்றச் சாட்டுகளில் உண்மை இருப்பதாக உங்கள் குழு கருதுகிறதா?

மார்க்ஸ்: அது குறித்துத்தான் ஆய்வு செய்ய வந்துள்ளோம்.வழக்கில் பல அய்யங்கள் உள்ளன. ஏனென்றால் அன்சாரி பிளாக்பெரி செல்போனை வைத்துக் கொண்டு ஊட்டியில் இயங்கும் இந்திய இராணுவ தளத்தை வெளியில் ரோட்டில் நின்று கொண்டு படம் பிடித்தார். அந்தப் படத்தை இலங்கைக்கு அனுப்ப முயற்சி செய்தார் என்று எஃப். ஐ.ஆரில் சொல்லப்படுகிறது. இந்த எஃப்.ஐ.ஆரில் பல முரண்பாடுகள் உள்ளன. அவற்றை நாங்கள் தொகுத்திருக்கும் உண்மை அறியும் குழுவின் அறிக்கையில் பதிவு செய்துள்ளோம். இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்திய இராணுவமே இந்த இராணுவ தளத்தில் பயிற்சி அளிக்கும்போது அன்சாரியின் புகைப்படம், அதுவும் வெளியில் ரோட்டிலிருந்து எடுக்கும் படம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதுவருக்கு எதற்கு? அவர்களுக்கு கிடைக்காத என்ன இரகசியத்தை இந்த செல்போன் படங்கள் தந்து விட முடியும்? இந்தியாவும் இலங்கையும் “மோஸ்ட் ஃபேவர்டு நேஷன்ஸ்’ என்ற அடிப்படையில் செயல்படுவதை நாம் அறிவோம் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

ம.ரி: தூத்துக்குடி துறைமுகம் போன்ற முக்கிய இடத்தின் வரைபடங்கள் அன்சாரியிடம் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் கூறுகிறதே!

மார்க்ஸ் : இன்று கூகுள் உள்ளிட்ட இணைய தளங்களில் இவர்கள் சொல்லக் கூடிய மேப்கள் கிடைக்கின்றன. அதனால் அன்சாரியின் மூலம் இதை வாங்க வேண்டியது இல்லை. அதுவும் சி.டி.யில் பதிவு செய்து நேரடியாக கொடுக்க அன்சாரி இலங்கைக்கு போனார் என்பதும் நம்பும்படியாக இல்லை.

ம.ரி : அன்சாரி கைது செய்யப்பட்டது குறித்து முன்னுக்குப்பின் முரணான தகவல் வருகிறதே?

மார்க்ஸ் : காவல்துறை 19ம் தேதி திருச்சி டோல் கேட்டில் விரட்டிப் பிடித்து கைது செய்ததாக சொல்கிறது. அது உண்மையல்ல. அன்சாரியை 16ம் தேதியன்றே திருச்சி விமான நிலையத்தில் கைது செய்து காவல்துறை வைத்திருந்தது. திருச்சி டோல் கேட்டில் அன்சாரியை கைது செய்யவில்லை.

ம.ரி : அப்படியானால் 16ம் தேதி யன்று கைது செய்யப்பட்ட அன் சாரியை 19ம் தேதி கைது செய்த தாக காவல்துறை ஏன் பொய் சொல்ல வேண்டும்?

மார்க்ஸ் : பொதுவாக பொய் வழக்கை ஜோடிப்பதற்காக இந்த அவகாசத்தை காவல்துறை பயன்படுத்திக் கொள்ளும். அன்சாரி விஷயத்திலும் அப்படித்தான் நடந்து இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். உண்மையில் அன்சாரி காவல்துறையால் கண்காணிக்கப்பட்டிருந்தால், அவர் குற்றச் செயலில் ஈடுபட்டதற்கு உளவுத்துறையிடம் ஆதாரம் இருந்தால் கைது செய்த உடனே அன்சாரியை கோர்ட்டில் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் காவல்துறை அப்படிச் செய்யவில்லை. அதுவும் எங்களுக்கு சந்தேகத்தை கிளப்புகிறது. தஞ்சை வல்லம் பகுதியைச் சேர்ந்த ராதா என்ற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியுடன் அன்சாரி நெருங்கிப் பழகினாராம். அவரிடமிருந்து இராணுவ ரகசி யங்களைப் பெற்றாராம். இதை போலீஸ் சொல்கிறது. ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளிடம் எல்லாம் இராணுவ ரகசியங்கள் இருக்கும் என்பது நம்பும்ப டியாக இல்லை. அதே சமயம், அந்த இராணு அதிகாரியை போலீஸ் ஏன் இதுவரை விசாரிக்கவில்லை என்பதற்கும் பதிலில்லை.

ம.ரி : அன்சாரியை வழக்கத்திற்கு மாறாக கியூ பிரிவு போலீசார் கைது செய்திருப்பது பற்றி?

மார்க்ஸ் : ஆமாம். கியூ பிரிவு போலீஸ் கைது செய்து வழக்கை நடத்துகிறது. கியூ பிரிவு போலீஸ் நக்ஸலைட்டுகளின் செயல்பாடுகளை உளவு பார்க்க 1970களில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இதற்கு 1993ல் போலீஸ் அதிகாரம் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு சீருடை கிடையாது. காவல் நிலையத்திலும் பெயர் பலகை கிடையாது. காவல் துறைக்கும், உளவுத்துறைக்கும் செயல்பாடுகளில் வேறுபாடுகள் உண்டு. உளவுத்துறை என்பது இரகசிய அமைப்பு. ஒரு வகையில் சட்ட நெறிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பு என்றும் கூட சொல்லலாம். இது சேகரிக்கும் உளவுத் தகவல்களை அப்படியே சாட்சியமாக ஏற்க முடியாது. காவல்துறை என்பது அப்படியல்ல… ஒருவரை கைது செய்தால் அவர் குற்றவாளி என போலீஸ் கருதினால் முறையாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தல், அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கைது செய்தல், பொருட்களை பறிமுதல் செய்தல், தேடுதல், அவருக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும். இதோடு இதன் பணி முடியாது. அது சேகரித்த தகவல்களை, சாட்சியங்களின் உண்மைத் தன்மையை நீதிமன்றத்தில் அது நிறுவியாக வேண்டும்.

ம.ரி : ஒரே இலாகா போலீசாரே கைது செய்து வழக்கை நடத்தக் கூடாது என்கிறீர்களா?

மார்க்ஸ் : அப்படியல்ல. உளவுத் துரைக்குக் காவல்துரை அதிகாரம் இருக்கக்கூடாது. இருந்தால் இந்த இலாகாவை பயன்படுத்தி அரசியல் காரணத்திற்காகவும், மற்ற சுய லாபத்திற்காகவும் பொய்யான வழக்கைப் போட்டு, போலியான ஆதாரங்களை தயார் செய்து யாரை வேண்டுமானாலும் பழி வாங்க முடியும். ஆகவேதான் கூடாது என்கிறோம். இது மனித உரிமை மீறலாகவும் அமையும்.

ம.ரி : கியூ பிரிவு போலீஸ் இந்த வழக்கை நடத்துவது மனித உரிமை மீறலாகக் கருதுகிறீர்களா?

மார்க்ஸ் : மனித உரிமைக்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமாமியங்குவதற்கு வழைவகுக்கும் கியூ பிரிவை கலைக்க வேண்டும்.மேலை நாடுகளில் கூட இதுபோல காவல் அதிகாரமுடைய உளவு அமைப்புகள் கிடையாது. எனவே கியூ பிரிவு இந்த வழக்கை நடத்துவது சரியல்ல.

ம.ரி : அன்சாரி மீது போடப்பட்டிருப்பது பொய் வழக்கு என்றால் அதில் உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறீர்களா?

மார்க்ஸ் : இஸ்லாமியர்கள் இறைத் தூதராக ஏற்றுக் கொண்ட நபிகள் நாயகத்தை உண்மைக்குப் புறம்பாக அவதூறு கூறி படமெடுக்கப்பட்டதை கண்டித்து அந்த இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், இந்தக் கொடும் செயலுக்கு துணைபோகும் அமெரிக்க அரசை கண்டித்தும் உலகம் முழுவதும் போராட்டம் நடந்தாலும் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் எதிர்ப்பு போராட்டம் மிகவும் தீவிரமாகவும் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காகவும், இஸ்லாமிய சமுதாயத்தை அச்சப்படுத்தி போராட்டத்தை வீரியமிழக்கச் செய்யவும்தான் அன்சாரி மீது வழக்கு போடப்பட்டிருக்கலாம் என்று நம்பத் தோன்றுகிறது. அன்சாரி கைதுக்குப் பின்னால் உள்நோக்கம் இருப்பதாகவே நமக்கும்படுகிறது.

(பேட்டி & படங்கள் : நாச்சியார் கோவில் அபு முஜாஹிதா)

இஸ்லாமியர்கள் சட்டரீதியாக எதிர் கொள்ள வேண்டும்!

அன்சாரி கைது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவரும் சமூக ஆர்வலருமான ராஜவேலுவை நேரில் சந்தித்து கருத்து கேட்டோம். “இஸ்லாமிய சமூகம் முதலில் சட்ட ரீதியான விழிப்புணர்வை பெற வேண்டும். இதுபோன்ற வழக்குகளை சட்ட ரீதியாக எதிர் கொள்ள வேண்டும். பாதிக்கப்படும் இஸ்லாமியர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். மிக முக்கியமாக, இஸ்லாமிய சமூகம், திமுக, அதை விட்டால் அதிமுகவை மட்டும் ஆதரிப்பதை விட்டு மாற்று அரசியல் சக்திகளுக்கு ஆதரவு கொடுத்து தங்களின் இருப்பை வலிமைப்படுத்த வேண்டும்…” என்றார் நம்மிடம்.

அப்பாவும் ஒரு கிறிஸ்தவப் பாதிரியாரும்

பாப்பாநாட்டில் ’சர்ச்’ கிடையாது. பத்து கி.மீ. தொலைவில் உள்ள ஒரத்தநாட்டுக்குத்தான் போக வேண்டும். அப்பா சர்ச்சுக்குப் போவது கிடையாது, அம்மா போவதைத் தடுப்பதும் கிடையாது.

மன்னார்குடிக்கு அருகில் உள்ள ஆதிச்சபுரம்தான் அம்மாவின் ஊர். அம்மா வீட்டில் நான் பிறந்தபோது (1949) மன்னார்குடி பங்கு கோவிலுக்கு என்னைப் பெயர் சூட்டத் தூக்கிச் சென்றுள்ளனர். திரு முழுக்கு அளிக்கும் நேரத்தில் மார்க்ஸ் எனும் பெயரை அப்பா சொல்ல அந்தப் பங்குசாமியார் (பெயர் தெரியவில்லை) அந்தப் பெயரை எல்லாம் சூட்ட முடியாது எனச் சொல்லி விட்டார். அப்படியானால் நான் இவனை எந்த மத அடையாளமும் இல்லாமலேயே வளர்த்துவிட்டுப் போகிறேன் எனஅப்பா என்னைத் தூக்கி வந்துள்ளார்.

என் அம்மா வழி தாத்தா குடும்பம் ரொம்பவும் பக்தி நிறைந்தது. ஊர்க்காரர்கள் போய்ப் பேசி பிறகு ஏதோ சமாதனம் ஆகி இந்தப் பெயரைச் சூட்டியுள்ளனர்.

#######

மார்க்ஸ் எனப் பெயர் வைப்பதில் சிக்கல் எழுந்தது நான் விவரம் அறியாதபோது நடந்தது. விவரம் அறிந்தபின்னும் இப்படி ஒரு நிகழ்ச்சி. சுமாரான மதிப்பெண்களுடன் 11ம் வகுப்பு (அன்றைய SSLC) பாஸ் பண்ணி இருந்தேன் (1963). பி.யூ.சி இல் சேர மூன்று கல்லூரிகளுக்கு விண்ணப்பித்திருந்தேன். முதலில் திருச்சி செய்ன்ட் ஜோசப் கல்லூரியிலிருந்து சேர்க்கைக் கடிதம் வந்திருந்தது.

கல்வித்துறையில் அனுமதிபெற்று குறை வயதில் (under age) தேர்வு எழுதியவன் நான். வகுப்பிலேயே நான்தான் சின்னப் பையனாக இருப்பேன். ஜோசப் கல்லூரி முதல்வர் ஒரு பாதிரியார். புன்னகைத்தவாறே என் சான்றிதழ்களைப் புரட்டியவர் திடீரெனக் கடு கடு ஆனார். “நீ ரோமன் கத்தோலிக்கன்தானே?” எனச் சீறினார். ஆம் என்று தலை அசைத்தேன். “இது என்ன பெயர்? மார்க்ஸ்,லெனின் என்றெல்லாம் எந்தச் சாமியார் உனக்குப் பெயர் வைத்தார்?” என்றெல்லாம் கடு கடு தொடர்ந்தது. அப்பா எரிச்சலானார். அவருக்கு ஒன்றும் செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ப்பதில் பெரிய ஆர்வமில்லை. அம்மாவின் பிடிவாதத்தில்தான் வந்திருந்தார்.

நான் இடம் கிடைக்காமல் போய்விடுமோ எனப் பயந்து போனேன். என் கண்கள் கெஞ்சின. அப்பா அமைதியாக நின்றிருந்தார். “போ, ரெக்டாரைப் பார்த்து அனுமதிக் கடிதம் வாங்கி வா. அப்புறம் பணம் கட்டலாம்,”

ரெக்டார் அலுவலகத்திற்குப் போனோம். மாலை 4 மணிக்குத்தான் பார்க்கலாம் என்றார்கள். அப்பா என்கையைப் பற்றிக் கொண்டார். “போகலாம் வா” என்றார். நான் தயங்கினேன்.”அட வாடா” என்று இழுத்துச் சென்றார்.

வீட்டிற்குவந்தால் தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியிலிருந்து சேர்க்கைக் கடிதம் வந்திருந்தது. இன்றுநினைத்தாலும் இனிக்கும் ஒரு நான்காண்டு கால கல்லூரி வாழ்க்கை எனக்கு வாய்த்தது.

இதுநடந்து அரை நூற்றாண்டு ஆகி விட்டது. இப்போதெல்லாம் கிறிஸ்தவப் பாதிரிமார்கள் அப்படி இருப்பதில்லை. 1970 களில் உருவான கிறிஸ்தவ விடுதலை இறையியல் அவர்களில் பெரிய மாற்றங்களை இன்று ஏற்படுத்தியுள்ளதும் அதற்கொரு முக்கிய காரணமாக இருக்கலாம்..

##########

அப்பாவைச் சந்திக்கப் பலரும் வருவார்கள். பெரும்பாலும் கம்யூனிஸ்டுகள், அவர்களில் பலர் மலேசியாவில் அப்பாவுடன் இயக்கத்தில் இருந்தவர்கள்; ஓரிருவர் அப்பாவைப் போலவே நாடு கடத்தப்பட்டவர்கள். இன்னும்சிலர் உள்ளூர் கம்யூனிஸ்டுகள். அப்புறம் நிறைய திராவிட இயக்கத்தவரும் அப்பாவுக்கு நண்பர்கள்.

வீட்டில் பெரிதாக சாமி படங்கள் , ஜெபம் சொல்லுதல் எல்லாம் கிடையாது. அம்மா கிறிஸ்துமஸ் முதலான தினங்களில் ஒரத்தநாடு சர்ச்சுக்குப் போவாங்க. அருகில் உள்ள வீரக் குறிச்சி அந்தோனியார் கோவிலுக்கும் அவ்வப்போது போய் வருவதுண்டு. நானும் தம்பி தங்கைகளும் கிறிஸ்துமஸ் போன்றநாட்களில் அம்மாவுடன் போய் வருவோம்.

பாப்பாநாடு எங்களின் பூர்வீகக் கிராமம் கிடையாது. அங்கு கிறிஸ்தவக் குடும்பங்களும் அதிகமில்லை.எனது பழக்கங்கள் யாவும் இந்து மற்றும் முஸ்லிம் நண்பர்களுடன்தான். கடவுள் பக்தி எனக்கு இருந்ததில்லை. கடவுள் வெறுப்பும் இருந்தது கிடையாது. கடவுள் இருந்தா நல்லது; இல்லாவிட்டால் அதைவிட நல்லது என்கிற ரீதியில் வளர்ந்தேன்.

#############

அப்பா மலேசியாவிலிருந்து தப்பி வந்தபின் அவரை நாடு கடத்தியதாக அன்றைய மலேசிய பிரிட்டிஷ் அரசு அறிவித்ததை நான் பலமுறை குறிப்பிட்டுள்ளேன். அப்பா இங்கு வந்தபின்தான் திருமணமாகி நான் பிறந்தது.

அப்பா வந்த சில மாதங்களுக்குப் பின் அப்பாவுடன் இயக்கத்தில் இருந்த சுப்பையாவை நாடு கடத்தினார்கள். அந்தக் கதையை நான் ஒரு மலேசிய இதழில் விரிவாக எழுதியுள்ளேன். இரண்டு தலைமுறைகளுக்கு முன் திண்டுக்கல் மணப்பாரைப் பகுதியிலிருந்து கூலியாய்ச் சென்ற தலித் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் சுப்பையா. அவர் தம்பி முத்துச்சாமி. சின்ன வயதில் தாயை இழந்தவர்கள். அவர்களின் அப்பா பழனியாண்டி நோய்வாய்ப்பட்டு இறந்த பின், அப்போது மலேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் மிகவும் செல்வாக்குடன் இருந்த அப்பாவின் வளர்ப்புப் பிள்ளைகள் ஆயினர். பிள்ளைகள் எனச் சொல்கிறேனே ஒழிய அப்பவுக்கும் சுப்பையா அண்ணனுக்கும் வயது வித்தியாசம் ஒரு பத்துஅல்லது பன்னிரண்டு இருக்கலாம். அவ்வளவுதான்.

சுப்பையா நாடு கடத்தப்பட்டு வந்த சிறிது காலத்தில் முத்துச்சாமியும் இங்கு வந்துவிட்டார். மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். இந்த நாட்டில் அவர்களுக்கு யாரும் கிடையாது. அப்பாவே பெரும் வறுமையில் இருந்தபோதும் அவர்களையும் தன் குடும்பத்தோடு வைத்துக் கொண்டார்.

சுப்பையா அண்ணனுக்குத் திருமணம் செய்ய முயற்சித்தார் அப்பா. யாரும் பெண் கொடுக்கத் தயாராக இல்லை.எனக்கு அக்கா முறையுள்ள ஒருவர். பெயர் மேரி அந்தோணியம்மாள். யாரும் இல்லாதவர். ஒருஉறவினர் வீட்டுக்கு வந்திருந்தார், அப்பா சுப்பையாவை அழைத்துச் சென்று அவர் முன் நிறுத்தி, “பிடித்திருக்கிறதா?” என்று கேட்டார். அவர் சம்மதித்தவுடன் உள்ளூர் தி.மு.கதலைவர் துரைஅரசன் என்பவர் தலைமையில் அவர்களுக்குக் குத்தகைக்காடு எனும் கிராமத்தில்திருமணம் நடைபெற்றது. அப்போது எனக்கு வயது ஏழு அல்லது எட்டு இருக்கலாம். சுப்பைய்யாவை அண்ணன் என்றும் மேரியை அக்கா என்றும் அழைப்பேன். பின்னாளில் பள்ளிக்கூடம் சென்றபின் இந்த உறவு முறையைச் சுட்டிக்காட்டிக் கூடப் படிக்கும் பசங்கள் சிரிப்பார்கள்.

முத்தண்ணனுக்கு அவ்வளவு எளிதாகத் திருமணம் செய்துவிட இயலவில்லை. உறவுப் பெண் ஒருவர். பெயர் வியாகூல மேரி. ஏழைக் குடும்பம். எனினும் சாதி தெரியாத பையனுக்குப் பெண் கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. பல நாள் பேச்சு வார்த்தைகள் நடந்தன. முத்துச்சாமி பஞ்சாயத்து போர்டு கிளார்க். தபால் துறையில் ஈ.டி ஊழியர் வேறு. எல்லாவற்றையும் யோசித்து இறுதியில் பெண் வீட்டார் ஏற்றுக் கொண்டார்கள். கிறிஸ்தவராக மதம் மாற்றித் திருமணம்செய்ய வேண்டும் என்கிற நிபந்தனையை அப்பா ஏற்றுக் கொண்டார்.

லாரன்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு முத்தண்ணனுக்கு சர்ச்சில் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

அப்போது ஒரத்தநாடு பங்குத் தந்தையாக இருந்தவர் தான் ஃபாதர் சில்வேயிரா. கருணை கசியும் கண்கள், புன்னகை தவழும் முகம், மிக எளிமையான தோற்றம், தலையில் ஒரு சட்டித் தொப்பி ஆகியவற்றுடன் இன்னும் என் நினைவில் நிற்கிறார். நீண்ட வெள்ளை அங்கி தரிக்காமல் அவரை நான் பார்த்ததாக நினைவில்லை.

முத்துச்சாமி பற்றி அவர் விசாரித்தபொழுது அவருக்கு ஒரு அண்ணன் இருப்பது, அவருக்கு ஒரு கிறிஸ்தவப்பெண்ணை அப்பா திருமணம் செய்து வைத்திருப்பது எல்லாவற்றையும் விசாரித்துத் தெரிந்துகொண்டார்.

#########

ஒருநாள் ஃபாதர் சில்வேயிரா என் வீட்டிற்கு வந்தார். அப்பா அவருக்குத் தேநீர் கொடுத்து உபசரித்தார். அம்மாவுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். அவர் முன் முழந்தாள் இட்டுச் சிலுவை வாங்கிக்கொண்டார். என்னை அழைத்த பாதிரியார் முதுகில் தட்டிக் கொடுத்து வாழ்த்தினார், பின் மெதுவாகத்தான் வந்த நோக்கத்தை அவிழ்க்கத் தொடங்கினார்.

இப்படிஒரு கிறிஸ்தவப் பெண்ணை ஒரு இந்துப் பையனுக்குத் திருணம் செய்வித்து அவள் மீது கிறிஸ்துவின்மீது நம்பிக்கையற்ற ஒரு வாழ்க்கையைச் சுமத்தி இருப்பது நியாயமில்லை என்றார்.

“ஃபாதர், உங்களுக்குத் தெரியும். நானே சர்ச்சுக்கெல்லாம் போகாதவன். இந்த நம்பிக்கை எல்லாம் எனக்கே கிடையாது” – என அப்பா தொடங்கியவுடன்,

“எனக்கு அதெல்லாம் தெரியும். உங்கள் நம்பிக்கையைப் பற்றி நான் பேச வரவில்லை. நம்பிக்கை உள்ளஒரு பெண்ணை, அவளுக்கு யாருமில்லை என்பதற்காக இப்படிச் செய்திருப்பதைத்தான் கேட்க வந்தேன்.”

“அவர்களுடைய நம்பிக்கையில் நான் தலையிட விரும்பவில்லை. இப்ப என்ன செய்வது? அவங்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கு. அடுத்த குழந்தையும் பிறக்கப் போகுது. என்ன செய்ய முடியும்?”

“அதை நான் பாத்துக்கறேன். அவங்க ரண்டு பேர்கிட்டையும் நான் பேசுறேன். உங்க முன்னாடியே கேட்கிறேன்.அவங்க சம்மதிச்சா அவங்களுக்கு ஞானஸ்நானம் பண்னி மறுபடியும் சர்ச்சில் திருமணம் செஞ்சு வைக்கிறேன்” என்றார் ஃபாதர்.

எல்லாவற்றையும்கேட்டுக் கொண்டு உள்ளே சோடா சுற்றிக் கொண்டிருந்த அண்ணனை அப்பா அழைத்தார். தம்பி முத்துச்சாமி, லாரன்ஸ் முத்துச்சாமி ஆகி, கிறிஸ்தவ நாடார் சமூகத்தில் ஓர் அங்கமாகி உறவு முறைகளைப்பேணி வருவதைக் கவனித்து வந்த அண்ணன் சுப்பையா அருட் தந்தை சில்வேயிராவின் கருத்தை ஏற்றுக்கொண்டார்.

மலேசியக் காடொன்றில் ஒரு சீனப் பெண் போராளியுடன் மறைந்திருந்தபோது பிரிட்டிஷ் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டுப் பிடிபட்டவர் அண்ணன் சுப்பையா. அந்தப் பெண் துப்பாக்கிக் குண்டடி பட்டுவீழ்ந்தவுடன், “இந்தோ தொங்சி (இந்தியத் தோழனே), நீ ஓடிப்போ. பிழைத்துக் கொள். ஓடும்போது உன் துப்பாக்கியை சேற்றில் புதைத்துவிட்டு ஓட மறவாதே…” என அவள் சொல்லியதையும், அன்ணன் திரும்பித் திரும்பிச் சொல்வார். ஓடிப் பிடிபட்டதையும், பல மாதச் சித்திரவதைகளுக்குப் பின், பிடிபட்ட தருணத்தில் கையில் ஆயுதங்கள் ஏதும் இல்லை என்பதால் உயிர்ப் பிச்சை அளிக்கப்பட்டுத் தான் நாடுகடத்தப்பட்டதையும் அண்ணன் நிலவொளியில் மணல் மேட்டில் அமர்ந்து சொன்னதைப் பலமுறை கேட்டவன் நான்.

அதைத் திருப்பித் திருப்பிக் கேட்க எனக்கும் அலுக்காது. சொல்ல அவருக்கும் அலுக்காது.

பகுத்தறிவுச் சிந்தனைகள், மார்க்சீய நூல்கள் ஆகியவற்றில் எனக்கு ஈடுபாடுகளை ஏற்படுத்தியவர் அண்ணன் சுப்பையாதான், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை உரத்த குரலில் பாடுவார். 12 கிமீ சைக்கிள் மிதித்து இரவு இரண்டாம் ஆட்டம் ‘இரும்புத்திரை’ திரைப்படத்திற்கு என்னை அவர் அழைத்துச் சென்றதும் திரும்பி வரும் வழி எல்லாம் “மனிதரை மனிதர் சரி நிகர் சமமாய் மதித்திடல் நம் கடமை…”, “கையில வாங்கினேன் பையில போடல, காசு போன இடம் தெரியல..” என உரத்த குரலில் அவர் பாடி வந்ததும் இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன. வீரக்குறிச்சிக்கும் கரம்பயத்திற்கும் இடையில் ஒரு சிறு காட்டாற்றுப் பாலம் இருக்கும். அதன் மீது அந்த நள்ளிரவில் அண்ணன் அனாயசமாகப் பாடிச் செல்ல, நான் சைக்கிள் கேரியரில்அண்ணனின் இடுப்பைப் பற்றிக் கொண்டு இதோ போய்க் கொண்டிருக்கிறேன்…..

##############

அண்ணனுக்கு அன்று மேல் எழுந்து கொண்டிருந்த தி.மு.க வையும் அண்ணா வையும் சுத்தமாகப் பிடிக்காது. எனக்கும் அவர் மூலமாக அந்த வெறுப்பு தொற்றிக் கொண்டது.

“இந்தத்திண்ணைத் தூங்கிப் பேர்வழிகளிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி….

கடவுள்இருப்பதும் இல்லை என்பதும் கவைக்கு உதவாத வெறும் பேச்சு….”

என்றெல்லாம் உரக்கப் பாடும் அண்ணன் சுப்பையா அன்று அந்த முடிவு எடுத்ததை நான் இப்போது புரிந்துகொள்கிறேன்.

############

ஒரத்தநாடு மாதா கோவிலில் எட்டுமாத கர்ப்பிணியான மேரி அந்தோணியம்மாளுக்கும், வின்சென்டாகப் பெயர் மாற்றித் திரு முழுக்கு அளிக்கப்பட்ட அண்ணன் சுப்பையாவுக்கும் மீண்டும் ஒருமுறை திருமணம்செய்வித்தார் ஃபாதர் சில்வேயிரா. ஸ்டெல்லா எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுத் திருமுழுக்குஅளிக்கப்பட்ட அவர்களின் முதல் மகள் என் அம்மாவின் கைகளைப் பற்றிக்கொண்டு நின்றிருந்தாள். அம்மாவும் எனது தங்கைகளும் நானும் அருகில் நின்றிருந்தோம். வேறு யாருக்கும் அழைப்பில்லை.

“இறைவனால் இணைக்கப் பட்டவர்களை மனிதர்கள் பிரிக்காதிருப்பார்களாக..” என்று கூறி அருட் தந்தை சில்வேயிரா மணமக்கள் மீது புனித நீரைத் தெளித்தபோது தான் பிரியமுடன் நேசித்த தன் வளர்ப்பு மகனுக்கு ஆசி கூற அப்பா அங்கில்லை.

அஸ்ஸாம் கலவரமும் வங்கதேச முஸ்லிம்களும் 

[தினக்குரல் (கொழும்பு) நாளிதழுக்கு எழுதப்பட்ட பத்தி]

அஸ்ஸாமில் மீண்டும் ஒரு இனக்கலவரம் நடந்துள்ளது. சுமார் 65 பேர்களிலிருந்து 80 பேர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர். 500 கிராமங்கள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுள்ளன. மூன்று லட்சத்திலிருந்து நான்கு லட்சம் மக்கள் வரை உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். மாநிலமெங்கும் உருவாக்கப்பட்டுள்ள சுமார் 273 முகாம்களில் இவர்கள் கொண்டு சென்று குவிக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளும்கூட இல்லை என்பதோடு பெரிய அளவில் இங்கு தொற்றுநோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளது பற்றி செய்திகள் குவிகின்றன. இத்தகைய முகாம்களின் நிலை எப்படி இருக்கும் என இலங்கைத் தமிழ் வாசகர்களுக்கு விரிவாக விளக்க வேண்டியடில்லை.

கொல்லப்பட்டவர்களிலும் அகதிகளாக்கப்பட்டவர்களிலும் சுமார் 80 சதத்திற்கும் மேற்பட்டோர் முஸ்லிம்கள். பிறர் போடோ பழங்குடியினர். போடோ பழங்குடி மாவட்ட நிர்வாகத்திற்குட்பட்ட பகுதிகளில் அருகருகே வாழ்ந்து வந்த போடோக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இன்று இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. சென்ற ஜூலையில் மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த இரு முஸ்லிம் இளஞர்கள் படு மோசமாகத் தாக்கப்பட்டனர். இதன் எதிர்வினையாகச் சென்ற ஜூலை 19 அன்று ‘போடோ விடுதலைப் புலிகள்’ அமைப்பைச் சேர்ந்த முன்னாள் ஆயுதப் படையினர் நால்வர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து ஜூலை 20 முதல் 26 வரை நடைபெற்ற கலவரத்தில்தான் மேற்குறிப்பிட்ட அவலங்கள் அரங்கேறின. இந்த நாட்களில் அஸ்ஸாம் தலைநகரான குவாகாட்டியை நோக்கி வந்து கொண்டிருந்த சுமார் 32 வேக ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன, குவாகாட்டி ரயில் நிலையத்தில் பல்லாயிரம்பேர் 72 மணி நேரம் போதிய உணவு, தண்ணீரின்றித் தவித்திருந்தனர். விமானச் சேவைகள் பயணத் தொகையை இரட்டிப்பாக்கின. அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங் ஓடி வந்து பார்த்துவிட்டு இது ஒரு தேசீய அவமானம் என்றார். இப்படியான ஒரு கலவரத்திற்கு எல்லாவிதமான சாத்தியங்கள் உள்ளன என அறிந்திருந்தும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் மத்திய மாநில அரசுகள் எடுக்கவில்லை. ஆறு நாட்கள்வரை கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வர இயலவுமில்லை.

இன அடிப்படையில் கலவரங்கள் உருவாவதும் மக்கள் கொல்லப்பட்டும் அகதிகள் ஆக்கப்பட்டும் துன்புறுவதும் அஸ்ஸாமுக்குப் புதிதல்ல. சென்ற நூற்றாண்டின் நடுப்பகுதி தொடங்கி இது நடைபெற்று வருகிறது. வெளியார் ஊடுருவல் மற்றும் குடியுரிமை வழங்குதல் தொடர்பாக 1970 மற்றும் 80களில் அங்கு மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்றதை அறிவோம். 1983 இல் நடைபெற்ற நெல்லிப் படுகொலையில் 2000த்திலிருந்து 3000 முஸ்லிம்கள் வரை கொல்லப்பட்டனர். இன்றுவரை அது குறித்து எந்த விசாரணையும் நடத்தி யாரும் தண்டிக்கப்படவுமில்லை. வெளி நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களின் குடியுரிமை குறித்த 1985 ஆம் ஆண்டு அஸ்ஸாம் உடன்பாடு நிறைவேற்றப்பட்ட பின்பும் 1993-94ம் ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் தம் வீடுவாசல்களை இழந்து ஓடவேண்டியதாயிற்று. எனினும் இதுவரை நடந்த இந்தக் கலவரங்கள் அனைத்துமே மண்ணின் மைந்தர்களான போடோ பழங்குடியினர் உள்ளிட்ட அஸ்ஸாமியர்களுக்கும் வங்க மொழி பேசும் முஸ்லிம்களுக்குமான மோதல்கள் என்பதில்லை. 1996-98 இல் சந்தாலிகள், ஓரான் மற்றும் முண்டா முதலான பழங்குடியினர் இலக்காக்கித் தாக்கப்பட்டனர்.

தொடர்ந்து அஸ்ஸாமின் பூர்வகுடியினரும், பொருளாதாரம், வேலை வாய்ப்பு, நில உரிமை ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுமான போடோக்கள் தனி மாநிலம் கோரி ஆயுதப் போராட்டம் தொடங்கினர். 1993ல் போராட்டத்தை முன்னெடுத்திருந்த ‘அனைத்து போடோ மாணவர் இயக்கத்திற்கும்’ (ABSU) அரசுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஓரளவு சுயாட்சித் தன்மையுடைய ‘போடோ சுயாட்சிக் கவுன்சில்’ (BAC) உருவாக்கப்பட்டது. எனினும் இந்த ஒப்பந்தத்தில் திருப்தி அடையாத ஏராளமான போடோ இளைஞர்கள் தலைமறைவாயினர். முழு மாநில அந்தஸ்து கோரி தீவிரமான ஆயுதப் போராட்டம் தொடங்கியது. ‘போடோ நாட்டிற்கான தேசிய ஜனநாயக முன்னணி’ (NDFB) மற்றும் ‘போடோ விடுதலைப் புலிகள்’ (BLT) எனும் அமைப்புகள் கடும் வன்முறையுடன் கூடிய ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்தன. அரசும் தன் தரப்பில் இன்னும் கொடும் வன்முறைகளுடன் இதை எதிர்கொண்டது.

2003ல் ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் ஊடாக போடோ விடுதலைப் புலிகள் தம் பெயரை ‘போடோ மக்கள் முன்னணி’ (BPF) என மாற்றிக் கொண்டு, புதிய ஒப்பந்ததின்படி உருவாக்கப்பட்ட ’போடோ பிரதேச கவுன்சிலில்’ (BTC) பங்கேற்றது. அதன் தலைவர் ஹகராமா மொகிலாரி கவுன்சிலின் நிர்வாகத் தலைவர் ஆனார். எனினும் அனைத்து போடோ மாணவர் இயக்கமும் போடோ தேசிய ஜனநாயக முன்னணியும் முழு மாநில அந்தஸ்து என்கிற கோரிக்கையைத் தொடர்ந்தன. 2003 ஒப்பந்தத்தில் போராளிகள் தம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்பது கறாராக வற்புறுத்தப்படாததன் விளைவாக போடோ விடுதலைப் புலிகள் மற்றும் போடோ தேசிய ஜனநாயக முன்னணி ஆகியவற்றின் முன்னாள், இன்னாள் உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் திரிவது என்பது போடோலான்டில் அன்றாட நிகழ்வுகளாகியது.

தற்போதைய கலவரத்தில் போடோ தேசிய ஜனநாயக முன்னணியினர் வழக்கமாகப் பயன்படுத்துகிற எந்திரத் துப்பாக்கிகளும் கைத்துப்பாக்கிகளும் முஸ்லிம்களைக் கொல்வதற்குப் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன என உளவுத்துறை கூறுகிறது. ஹகராமா மொகிலாரியும் இதே குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

மொகிலாரியின் தலைமையில் உள்ள போடோ பிரதேச கவுன்சில் ஊழலுக்கும் திறமையின்மைக்கும் பெயர்பெற்ற ஒன்றாகிவிட்டது. தாருண் கோகோய் தலைமையிலான அஸ்ஸாம் மாநிலக் காங்கிரஸ் அரசும் இதைக் கண்டுகொள்வதில்லை. இன்னொருபக்கம் சட்ட ஒழுங்கு அதிகாரம் அதாவது போலீஸ் அதிகாரம் இல்லாத போடோ பிரதேச நிர்வாகத்தால் தமக்கு எந்தப் பயனுமில்லை என்கிற கருத்து போடோக்களிடம் உள்ளது. போடோ மாவட்டக் கவுன்சிலுக்குள் பழங்குடியினரல்லாத அந்நியர்கள் யாரும் 2003க்குப்பின் நிலம் வாங்கக்கூடாது. அதாவது முஸ்லிம்கள், அஸ்ஸாமுக்குள் பழங்குடியினராக வரையறுக்கப்படாத சந்தாலிகள் ஆகியோர் இங்கு புதிதாக நிலம் வாங்கக்கூடாது. ஆனால் முன்னதாக இப்பிரதேசத்தில் அவர்கள் பெற்றிருந்த நில உரிமை செல்லுபடியாகும். ஒப்பந்தத்தின் இந்தப் பிரிவையும் போடோக்கள் ஏற்பதில்லை. அவர்களின் கருத்துப்படி ஏற்கனவே அவர்களின் நிலங்களெல்லாம் பறிபோய்விட்டதால் பழைய நில உரிமைகளை ஏற்க முடியாது.

இங்கொன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அஸ்ஸாம் பழங்குடியினரிலேயே அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் போடோக்கள்தான் எனினும் மொத்த மக்கள் தொகையில் அவர்கள் வெறும் 5 சதம் மட்டுமே. போடோ பிரதேச மாவட்டத்திற்குள்ளும் கூட இன்று அவர்கள் மூன்றில் ஒரு பகுதியினரே. சுயாட்சி உரிமை பெற்றுள்ள இந்த மாவட்டக் கவுன்சிலில் மூன்றில் இரு பங்கினர் போடோ அல்லாதவர்கள். இவர்கள் எல்லோரும் வங்கதேசத்திலிருந்து வந்த முஸ்லிம்களும் அல்லர். சந்தாலி, முண்டா, ஓரான் போன்ற இதர பழங்குடியினர், ராஜ்பங்சிகள், நேபாளிகள், மார்வாரிகள், முஸ்லிம்கள் எனப் பலரும் உள்ளனர். பெரும்பான்மையாக உள்ள இவர்கள் ‘போடோ அல்லாதவர் சுரக்‌ஷா சமிதி’ (NBSS) என்றொரு அமைப்பை உருவாக்கிக்கொண்டு தமது பிரச்சினைகளை முன்னெடுக்கின்றனர். பெரும்பான்மையாகத் தாமிருந்தும் அதிகாரத்தில் தமக்கிடமில்லை என்பது இவர்களின் பெரும் குறை. பட்டியல் சாதியில் இடம் மறுக்கப்பட்டுள்ள கோச் ராஜ்பங்க்சிகள் தாம் பெரும்பான்மையாக உள்ள ஒரு பகுதியை உருவாக்கி அதற்குக் ‘காம்டாபூர்’ எனப் பெயரிட்டு சுயாட்சி வழங்கக் கோருகின்றனர்.

வழக்கம்போல பிரச்சினை மிகவும் சிக்கலானது. இந்துத்துவவாதிகள் இதை ‘இந்து’ போடோக்களுக்கும் “அந்நிய’ முஸ்லிம்களுக்கும் இடையிலான கலவரமாகக் கட்டமைக்க முயல்கின்றனர். எண்பதுகளுக்குப் பின் உலகெங்கிலும் உருவாகியுள்ள இந்த அடையாள அரசியலை (identity assertion) இவர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் சொல்வதுபோல போடோக்கள் எல்லோரும் இந்துக்களல்ல. வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ள கிறிஸ்தவம் போடோக்கள் மத்தியிலும் ஒரு குறிப்பிட்ட அளவு வேர்பிடித்துள்ளது. அதேபோல முஸ்லிம்கள் எல்லோரும் ஒருபடித்தானவர்கள் அல்ல. அவர்களுள்ளும் கோரியா, டேசி எனப் பல பிரிவுகள் உண்டு. எல்லோரும் அந்நியர்களுமல்ல. எல்லோரும் தற்போது ஊடுருவி வந்தவர்களுமல்ல. வங்க தேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள அஸ்ஸாம் மாவட்டங்களில் இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் அஸ்ஸாமின் பிற பகுதிகளைக் காட்டிலும் மக்கள்தொகையின் அளவு மற்றும் பண்பு மாற்றம் (demographic change) சற்றுக் கூடுதல்தான் என்றபோதிலும் இந்தக் கூடுதல் “சற்று”தான் என்பதைக் கீழ்க்கண்ட அட்டவணையிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இந்திய மக்கள் தொகைக் கணக்கீடுகளிலிருந்து இந்தப் பத்தாண்டு சனத்தொகை மாற்றம் (decadal population increase) கீழ்க்கண்டவாறு கணக்கிடப்பட்டுள்ளது.

 

ஆண்டு        இந்தியா        அஸ்ஸாம்         துப்ரி             தேமாஜி            கர்பி ஆங்லாங்

 

 

1971-91           54.51               54.26                     46.65             107.50                      74.72

 

1991-01           21.54                18.92                     22.97             19.45                        22.72

 

2001-11           17.64                 16.93                    24.40              20.30                        18.69

 

துப்ரி, தேமாஜி, கர்பி ஆம்லாங் என்கிற எல்லையோர மாவட்டங்களில் ஒவ்வொரு பத்தாண்டு சனத்தொகை மாற்றமும் இதர இந்திய மற்றும் அஸ்ஸாம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் மேற்கண்ட அட்டவணையில் ஒப்பிடப்படுகிறது. 1971;91 ஆண்டுக் கணக்கு இருபதாண்டுக்குரியது என்பதை கவனத்தில் கொள்ளவும். 1981 இல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த வேறுபாடு தொடக்கத்தில் சற்றுத் தூக்கலாக இருந்தபோதிலும் போகப் போக இது பெரிதும் குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

அஸ்ஸாம் மக்கள்தொகை மாற்றம் குறித்து ஒன்றை நாம் புரிந்துகொள்வது அவசியம். இந்துத்துவ சக்திகள் சொல்வதுபோல இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒன்று. தேயிலைச் சாகுபடிக்காக வங்க தேசத்திலிருந்தும் பிறபகுதிகளிலிருந்தும் ஆசைகாட்டியும், கட்டாயமாகவும் கொண்டுவரப்பட்டவர்கள் இவர்கள். கிட்டத்தட்ட இலங்கை மற்றும் மலேசியாவிற்கு தமிழகத்திலிருந்து தோட்டத் தொழிலாளிகள் கொண்டு செல்லப்பட்டதுடன் இதை ஒப்பிடலாம். இது தவிர இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து வணிக நோக்குடன் ராஜஸ்தானிகள், மார்வாரிகள், பஞ்சாபிகள் முதலானோரும் இங்கு வந்து ‘செட்டில்’ ஆகியுள்ளனர். புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் ராகுல் பண்டிதா சொல்வதுபோல போடோக்கள் எதையும் சற்று ‘மெதுவாக’ச் (லேஹி…..லேஹி) செய்பவர்கள். கடும் உழைப்பாளிகளான வங்கதேச முஸ்லிம்கள் எதிலும் வேகம் காட்டுபவர்கள். நிலப் பஞ்சம் மிகுந்த வங்கப் பகுதியிலிருந்து இவர்கள் வளமிக்க பிரம்மபுத்திராப் பள்ளத்தாக்கின் ஆற்றங்கரையோரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வந்து குடியேறி விவசாயம் செய்து நிலங்களை உரிமையாக்கிக்கொள்ளத் தொடங்கினர். இதெல்லாம் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் நடந்தவை.

போடோக்களின் பழங்குடி மனப்பாங்கில் நிலத்தைத் தனியுடமை ஆக்கிக் கொள்வதற்கு இடமிருக்கவில்லை. பாசன விவசாயத்திலும் அவர்களுக்கு அக்கறை இருக்கவில்லை. சமூக உடைமை, இடம் பெயர் விவசாயம் என்பதாக இருந்த அவர்கள் நில உரிமையை இழந்த வரலாறு இதுதான். ஆற்றங்கரையோரம் குடியேறி இடம்பிடித்த முஸ்லிம்கள் காலப்போக்கில் சற்று உள்ளேயும் இடம்பெயர்ந்தனர். தேர்தல் அரசியல் உருப்பெற்றபோது குறிப்பிட்ட அளவு அரசியலதிகாரம் பெறவும் தொடங்கினர்.

இதெல்லாம் ஒரு நீண்ட காலகட்டத்தில் படிப்படியாக நடந்தது. சமீபகாலத்தில் நடைபெற்ற பெரிய அளவு புலப்பெயர்வு என்பது 1947 பிரிவினையின்போதும், 1971 வங்கதேச விடுதலைப் போரின்போதும் ஏற்பட்டதுதான். மேற்கண்ட அட்டவணையில் 1971-91 காலகட்டத்தில் ஏற்பட்ட சற்றுக் கூடுதலான அதிகரிப்பு இந்தப் பின்னணியில் உருவானதே. இந்த அதிகரிப்பெல்லாம் கூட வெறும் வங்கதேச முஸ்லிம்களால் மட்டுமே ஏற்பட்டது என்பது தவறு. தேமாஜி மற்றும் கர்பி ஆங்லாங் மாவட்டங்களில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் 1.84 மற்றும் 2.22 சதங்கள் மட்டுமே. இன்று கலவரம் நடந்துள்ள கோஹ்ராஜ்பூரில்தான் கடந்த பத்தாண்டில் அஸ்ஸாமிலேயே மிகக் குறைந்த அளவு மக்கள்தொகை அதிகரிப்பு (5.19சதம்) நடந்துள்ளது.

அந்நிய ஊடுருவல் என்கிற அரசியல் சொல்லாடல் அவிழ்த்து விடப்பட்டபின் இந்திய அரசு எல்லையோர ஊடுருவலைப் பெரிய அளவில் தடுத்துள்ளது. 4000கி.மீ நீளமுள்ள எல்லையில் 80சதம் இரட்டை முள்வேலியாலும் , தொலைதூரத்திற்கு வெளிச்சத்தைப் பீய்ச்சி அடிக்கும் மின் விளக்குகளாலும் பாதுகாக்கப்பட்டுள்ளது. எல்லை ஓரங்களில் எல்லைப் பாதுகாப்புப் படையும் பெரிய அளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருளை ஊடுருவக்கூடிய தொலைநோக்கிகளைக் கொண்டு இரவு பகலாக ஊடுருவல் கண்காணிக்கப்படுகிறது. வங்கதேசத் தூதரக அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி உரிய அனுமதி இல்லாமல் ஊடுருவிய 600 வங்கதேச முஸ்லிம்கள் இன்று இந்தியச் சிறைகளில் அடைபட்டுள்ளனர். தவிரவும் அமார்த்யா சென் உருவாக்கிய ‘பிரடிசி ட்ரஸ்டின்’ முன்னாள் இயக்குனர் ஏ.ஜே.பிலிப் கூறியுள்ளதுபோல அஸ்ஸாமின் இப்பகுதிகளுடன் ஒப்பிடும்போது வங்கதேசத்தின் சமூக வளர்ச்சிப் புள்ளிகள் இன்று ஒப்பீட்டளவில் அதிகமாக இருப்பதால் அங்கிருந்து இங்கே இப்போது புலம்பெயர்வதற்கான தேவையுமில்லை.

நிலைமை இவ்வாறு இருக்க அஸ்ஸாம் பற்றி எரிந்து கொன்டிருந்தபோதே அத்வானி, அருண்ஜேட்லி, நரேந்திரமோடி போன்றோர் பிரச்சினையை அந்நிய ஊடுருவலாகத் திசை திருப்பியதிலும், முஸ்லிம் வெறுப்பைப் பரப்பியதிலும், மோடி ஒருபடி மேலே போய் “இந்த ஊடுருவல் தேசப் பாதுகாப்பிற்கே ஆபத்து” என்பதாக முழங்கியதிலும் வழக்கம்போல எள்ளளவும் நியாயமில்லை. 1985 ஆம் ஆண்டு அஸ்ஸாம் ஒப்பந்தத்தின்படி (1). 1966க்கு முன் வந்தவர்கள் அனைவருக்கும் முழுக் குடியுரிமை உண்டு. (2). 1966லிருந்து மார்ச் 24, 1971 வரை இடம்பெயர்ந்து வந்தவர்களை அடையாளம் கண்டு அடுத்த பத்தாண்டுகளில் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கவேண்டும். (3). 1971 ஆம் ஆண்டுக்குப் பின் இங்கு வந்தவர்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட தரவுகளின்படி பெரிய அளவில் 1971க்குப் பின் வங்கதேச முஸ்லிம்களின் ஊடுருவல் நிகழவில்லை என்பதால் தற்போது கொல்லப்பட்டும், அகதிகளாக்கப்பட்டுமுள்ள முஸ்லிம்களில் கிட்டத்தட்ட அனைவருமே சட்டபூர்வமான குடிமக்கள்தான். இதில் கொடுமை என்னவெனில் இன்று அகதிகளாகியுள்ள முஸ்லிம்களின் வீடுகளை எரித்துச் சாம்பலாக்கிய நெருப்பு அத்தோடு அவர்களின் குடியுரிமைச் சான்றிதழ்களையும் எரித்துச் சாம்பலாக்கியுள்ளது.

பிரச்சினை வழக்கம்போலச் சிக்கலானது. பூர்வகுடிகளான போடோக்கள், வங்கத்திலிருந்து தொழிலாளிகளாகக் கொண்டுவரப்பட்ட முஸ்லிம்கள் இருசாரருமே இன்று சமூகத்தின் ஆக அடிநிலையில் இருப்பவர்கள். இந்த முஸ்லிம்கள் வங்கதேசத்திலிருந்த வேர்களை இழந்து பல பத்தாண்டுகளாகிவிட்டன. அவர்களை அந்நியர்கள் எனச் சொல்லி வெளியேற்றுவது அடிப்படை மனித நியாயங்களுக்குப் புறம்பான ஒன்று. போடோக்கள் முஸ்லிம்கள் இருசாரரும் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்திருப்பது பத்திரிக்கைப் பேட்டிகளைப் படிக்கும்போது விளங்குகிறது. பொருளாதார ரீதியாக அப்பகுதி மேம்படுத்தப்படுவது, வேலை வாய்ப்புகளை அதிகரிப்பது, நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்குவது முதலான நடவடிக்கைகள் மூலமாகவும், பாதிக்கப்பட்டவர்களை அச்சத்திலிருந்து விடுவிப்பதன் மூலமாகவுமே அங்கே அமைதி ஏற்படுத்தப்படவேண்டும். இன, மத வெறுப்புகளைத் தூண்டி வன்முறைக்கு வித்திடுபவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். நாட்டெல்லைகள் என்பன மிகச் சமீபமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று. ஆனால் மனித உறவு காலங்காலமானது. இன்னுங் காலங்காலமாய்த் தொடரக்கூடியது.

Top of Form